மேலும் அறிய

Ethirneechal : அப்பத்தா பிளான் பயங்கரமா இருக்கே... நேரடியாக களத்தில் இறங்கப்போகும் ஜீவானந்தம்... எதிர்நீச்சலில் நேற்று 

Ethirneechal: அப்பத்தா நடத்தப்போகும் பங்க்ஷனுக்கு தலைமை தாங்க வரப்போகிறார் ஜீவானந்தம். அதுவும் திருவிழா நடக்கும் அதே நாளில் அதே இடத்தில் என ஷாக் கொடுக்கிறார் அப்பத்தா. 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 14) எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். 

வீட்டுக்கு வந்த அப்பத்தாவிடம் நந்தினி வருத்தப்பட்டு பேசுகிறாள். இருந்த ஒரே நிம்மதியே அந்த சமையல் அறைதான் அதையும் பிடுங்கி ஜான்சி ராணியிடம் அவளின் மாமியார் கொடுத்ததால் புலம்புகிறாள். அப்பத்தா அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். ஜனனியின் அப்பா வந்து ஜனனியை திட்டியதை பற்றி அப்பத்தாவிடம் சொல்கிறார்கள். ஜனனி அவரிடம் சவால் விட்டதற்காக அவளை பாராட்டுகிறார் அப்பத்தா. இருப்பினும் நாச்சியப்பனின் கோபமும் நியாயம்தான் என்கிறார் அப்பத்தா. அவரின் ஆசையை நிறைவேற்றி காட்டு என சொல்கிறார் அப்பத்தா. 

 

Ethirneechal : அப்பத்தா பிளான் பயங்கரமா இருக்கே... நேரடியாக களத்தில் இறங்கப்போகும் ஜீவானந்தம்... எதிர்நீச்சலில் நேற்று 

அதை தொடர்ந்து அவர் ஒரு பன்க்ஷனுக்கு ஏற்பாடு செய்து இருப்பது பற்றி சொல்லி ஒரு பைலை ஈஸ்வரியிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார். அதை படித்து பார்த்த ஈஸ்வரி இவர்கள் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்த அதே நாள், அதே நேரம் அதே ஊரில் அப்பத்தாவும் இந்த பங்க்ஷன் ஏற்பாடு செய்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். மேலும் இந்த விழாவுக்கு தலைமை தாங்க வரப்போவது ஜீவானந்தம் என சொல்லி மேலும் பெரிய ஷாக் கொடுக்கிறார். மேலும் நீங்கள் அனைவரும் வந்து கலந்து கொண்டு சிறப்பாக பேச வேண்டும் என மருமகள்களிடம் சொல்கிறார் அப்பத்தா. 

Ethirneechal : அப்பத்தா பிளான் பயங்கரமா இருக்கே... நேரடியாக களத்தில் இறங்கப்போகும் ஜீவானந்தம்... எதிர்நீச்சலில் நேற்று 

அந்த நேரத்தில் கதிர், ஞானம் மற்றும் விசாலாட்சி அம்மாவும் அப்பத்தா பேசுவதை கேட்டு விடுகிறார்கள். அதை கேட்டு கதிர் கைதட்டி சந்தோஷப்படுகிறான். விசாலாட்சி அம்மா அப்பத்தாவை இப்படி செய்ததற்காக திட்டுகிறார். அண்ணனுக்கும் இதில் சந்தோஷம்தான் அதை தான் அவரும் எதிர்பார்க்கிறார் என கதிர் உற்சாகமாக பேசி அப்பத்தாவை  வெறுப்பேத்துகிறான். அவர் வரட்டும் மாலை மரியாதை எல்லாம் செய்துவிடுவோம் என்கிறான் கதிர்.

Ethirneechal : அப்பத்தா பிளான் பயங்கரமா இருக்கே... நேரடியாக களத்தில் இறங்கப்போகும் ஜீவானந்தம்... எதிர்நீச்சலில் நேற்று 

 

இரவு கதிரும் ஞானமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை ஈஸ்வரி மாடியில் இருந்து கேட்டு கொண்டு இருக்கிறாள். ஜீவானந்தம் அவனா வந்து வலையில் மாட்டிக்கொள்ள போகிறான். அவனை அங்கேயே முடிக்க வேண்டியது தான் என்கிறான். அப்போது வக்கீல் போன் செய்து குணசேகரன் உங்களை போய் வளவனை பார்த்து விட்டு வர சொன்னதாக சொல்கிறார். கதிருக்கு வளவன் யார் என்பது தெரியாமல் கேள்வி கேட்க ஏதோ அவனை குழப்பி விட்டு சென்று விடுகிறான் கதிர். 

ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திப்பதற்காக வேகவேகமாக செல்கிறாள். ஜனனியும் சக்தியும் பேங்க் வேலையாக செல்கிறார்கள். அபசகுனமாக ஜான்சி ராணி தேவையில்லாமல் அனைவரையும் வெறுப்பேத்தி கொண்டு இருக்கிறாள். ஈஸ்வரியை பார்த்ததும் வெண்பா வந்து ஈஸ்வரியை கட்டிக்கொள்கிறாள். என்ன விஷயம் சொல்லாமல் வந்து இருக்கிறீர்களே என ஜீவானந்தம் கேட்க பேசணும் என தோணுச்சு என ஈஸ்வரி சொல்கிறாள். வெண்பா இன்று தன்னுடைய அம்மாவின் பிறந்தநாள் என சொல்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது. 

தலைப்பு செய்திகள்

பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
Embed widget