மேலும் அறிய

Ethirneechal: ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தர்ஷினி: கோட்டைவிட்ட போலீஸ்: எதிர்நீச்சலில் தொடரும் பரபரப்பு!

Ethirneechal: ரவுடிகளிடம் இருந்து தர்ஷினி தப்பித்து விடுகிறாள். போலீஸ் அவளை அடைத்து வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்து விடுகிறது. குணசேகரன் வீட்டில் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதாக வெடிக்கிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 3) எபிசோடில் வீரசங்கிலி, தர்ஷினியை கடத்தி வைத்திருந்த பழைய ரவுடியை பார்த்து மிரட்டிவிட்டு எதிர்ப்பக்கமாக செல்கிறான். ஜனனியுடன் வந்த போலீஸ் டீம் வீரசங்கிலியை பின்தொடர்ந்து செல்கிறார்கள்.

குணசேகரன் வீட்டுக்கு வந்த ஆதிரை அங்கிருந்த கரிகாலன் மற்றும் ஜான்சியை பார்த்து கோபமாகி வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறாள். குணசேகரன் ஆதிரையை அவமானப்படுத்தி பேசுகிறார். "இது என்னுடைய வீடு யார் இருக்க வேண்டும், இருக்கக்கூடாது என நீ முடிவு செய்ய கூடாது. வீட்டை விட்டு வெளியே போ. உனக்கும் இந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என அசிங்கப்படுத்துகிறார்.

அதற்கு எல்லாம் துணிந்த ஆதிரை "எனக்கு நீ எவ்வளவோ அசிங்கத்தை கொடுத்துட்ட. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. இதுக்கு எல்லாம் அவமானப்பட்டு நான் போகமாட்டேன்" என சொல்லி மீண்டும் கரிகாலனை விரட்ட, குணசேகரன் ஆதிரையை அடிக்க கை ஓங்குகிறார். அதை ஞானம் தடுத்துவிடுகிறான். "கரிகாலன் இங்கே தான் இருப்பான்" என குணசேகரன் உறுதியாக சொல்லிவிட்டு செல்ல, ஆதிரை "நான் உங்களுக்கு முடிவு கட்டுறேன்" என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறாள்.

 

Ethirneechal: ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தர்ஷினி: கோட்டைவிட்ட போலீஸ்: எதிர்நீச்சலில் தொடரும் பரபரப்பு!


வீரசங்கிலி அவனுடைய கார் பின்னாலேயே ஒரு கார் வருவதை பார்த்து விடுகிறான். யார் அது என இறங்கி அந்த காரை சுத்தி சுத்தி பார்க்கிறான். அவர்களை மிரட்டி வண்டியை திருப்பிக்கொண்டு போக சொல்கிறான். பின்னால் போவது போல போய் மீண்டும் ரவுடியின் காரை பாலோ செய்கிறார்கள் போலீஸ்.
வெளியில் சென்ற ஆதிரை மீண்டும் வீட்டுக்கு ஏதோ டாக்குமெண்ட்ஸ் எடுக்க வந்ததாக ரேணுகாவிடம் சொல்கிறாள். திரும்பி வந்த ஆதிரையை பார்த்து ஆச்சி கேவலமாக பேச சரியான பதிலடி கொடுக்கிறாள் ஆதிரை.

ரேணுகாவிடம் ஞானம் வருத்தப்பட்டு பேசுகிறான். "என்னுடைய மனசு சங்கடப்பட்டதைப் பற்றி தான் சொன்னேனே தவிர உங்க இரண்டு பேருக்கும் சண்டை மூட்டி விடணும் என எதுவும் செய்யவில்லை" என ஞானம் சொல்கிறான். "இதை பற்றி இனிமேல் பேசவேண்டாம். அவங்க பேசினதுக்கு நம்ம திருப்பி பேசிவிட்டோம். சரி நீங்க சாப்பிடுறீங்களா? நான் போய் கொண்டு வரட்டுமா?" என்கிறாள்.

"வெளியே போய் சாப்பிடலாமா? " என ஞானம் கேட்டுவிட்டு உடனே வேண்டாம் யாராவது தப்பாக நினைத்துக் கொள்வார்கள் வேண்டாம் என் சொல்லிவிடுகிறான். ரேணுகா அவனைத் திட்டவும் "சரி போகலாம்” எனக் கிளம்புகிறார்கள். வீரசங்கிலியின் காரை பின் தொடர்ந்து போலீஸ் கார் செல்கிறது. ஒரு இடத்தில் இறங்கியதும் ரவுடியின் கூட்டம் அவர்களை பார்த்து விடுகிறது.  மீண்டும் வந்து அவர்களை மிரட்டி "நான் போலீஸ். மரியாதையா இங்க இருந்து கிளம்புங்க" என சொல்லி போலீசிடமே சொல்கிறான் வீரசங்கிலி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீரசங்கிலி ஆட்கள் தர்ஷினியை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விடுகிறார்கள். வீரசங்கிலி அந்த இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது அவனைப் பின்தொடர்ந்து போலீஸ் டீம் ஜனனியுடன் செல்கிறது. அதற்குள் தர்ஷினி அந்த அடியாட்களிடம் இருந்து தப்பித்து விடுகிறாள். இதை தர்ஷினியை பாதுகாக்கும் அந்த பெண் வீரசங்கிலிடம் சொன்னதும் அவன் அதிர்ச்சி அடைந்து எல்லா இடத்திலும் ஆட்களை விட்டு தேட சொல்கிறான்.

 

 

Ethirneechal: ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தர்ஷினி: கோட்டைவிட்ட போலீஸ்: எதிர்நீச்சலில் தொடரும் பரபரப்பு!


ரேணுகாவையும், ஐஸ்வர்யாவையும் அழைத்துக் கொண்டு ஞானம் வெளியில் கிளம்ப, அவர்களிடம் எங்கே போகிறார்கள் என கதிர் கேட்கிறான். அதைக் கேட்டு டென்ஷனான ஞானம் "இவ்வளவு நாள் அவர் கேட்ட கேள்விக்கு எல்லாம் அமைதியா கையை கட்டிக்கிட்டு பதில் சொல்லிக்கிட்டு இருந்தேன். இப்போ நீ வந்து கேள்வி கேக்குற" என தூக்கியெறிந்து பேச "என்ன அண்ணே இப்படி எல்லாம் பேசுற?" என கதிர் சங்கடப்பட்டு கேட்கிறான். ஞானம் இப்படி பேசியதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி அதிர்ச்சி அடைகிறாள்.

தர்ஷினியை அடைத்து வைத்திருந்த இடத்தை போலீஸ் டீம் கண்டுபிடித்து விடுகிறது. "பொண்ணை இங்கிருந்து தான் இடம் மாற்றி இருக்கிறார்கள். எப்படியாவது தேடிக் கண்டுபிடிங்க" என்கிறார் ஸ்பெஷல் ஆபீசர். தப்பித்து சென்ற தர்ஷினி ஒரு இடத்தில் போய் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். அவளை பார்த்து ஒரு ஆள் ஓடி வருகிறான். அவன் வீர சங்கிலியின் அடியாளா எனத் தெரியவில்லை.

 


தர்ஷினியை நெருங்கிய ஜனனி அவளை போலீஸ் உதவியுடன் மீட்டு எடுப்பாளா? மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
Embed widget