Karthigai Deepam Serial: ரேசன் கடையில் அபிராமி! கட்டியணைத்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
ஜீ தமிழில் கார்த்திகை தீபம் தொடரில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் முதன்மையானது ஜீ தமிழ். இதில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரேவதி அபிராமியை பார்க்க வேண்டும் என சொல்லி, கார்த்தியுடன் கிளம்பிய நிலையில் அபிராமி ரேஷன் கடைக்கு வர சொல்லி இருந்தார். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க?
ரேஷன் கடையில் அபிராமி:
அபிராமி ஏழை போல கெட்டப் போட்டு ரேஷன் கடையில் காத்துக் கொண்டிருக்க, ரேஷன் கடையில் வேலை செய்யும் பெண்மணி "லைன்ல வாமா" என்று சத்தம் போடுகிறார். அபிராமி "நான் பொருள் வாங்க வரல" என்று சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருக்க, கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் அங்கு வருகின்றனர்.
அபிராமியை பார்த்த ரேவதி "நீங்கள் இங்கதான் பொருள் வாங்குவீங்களா?" என்று கேட்க, "ஆமா எங்களால அரிசி காசு கொடுத்து வாங்கி சாப்பிட முடியாது. இங்க தான் வாங்குவோம்" என்கிறாள். பிறகு ரேவதி அபிராமிக்காக வாங்கி வந்த புடவையை கொடுக்கிறாள். "உங்கள பாத்தா எனக்கு வெளி ஆள் மாதிரியே தெரியல அத்தை" என்று கட்டியணைத்துக் கொள்ள அபிராமி சந்தோஷப்படுகிறாள்.
மன்னிப்பு:
அதைத்தொடர்ந்து கார்த்திக் வீட்டுக்கு வந்ததும், பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு "நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு வாங்க. உங்க பையன சந்திக்கலாம்" என்று சொல்கிறான். பரமேஸ்வரி பாட்டியும் கண்டிப்பாக வருவதாக சொல்கிறாள்.
மேலும், கார்த்திக் "சாமுண்டீஸ்வரி அத்தை அவங்க கதையை சொன்னாங்க.. நீங்க அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க" என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி "இத்தனை வயசுக்கப்புறம் எனக்கு மன்னிப்பு கேட்கிறது இல்லை. எந்த கவலையும் இல்ல. நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்று சொல்கிறாள்.
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி, ராஜராஜன் என எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, ராஜராஜனுக்கு விக்கல் ஏற்பட கார்த்திக் உங்க அம்மா நினைக்கிறாங்க போல என்று சொன்னதும் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை முறைக்கிறாள். உடனே கார்த்திக் "பார்த்து பல வருஷம் ஆகுது. இல்லையா நினைக்காம எப்படி இருப்பாங்க" என்று சமாளிக்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

