Karthigai Deepam: கார்த்திக் மனைவி கழுத்தில் மீண்டும் விழப்போகிறதா தாலி? சாமுண்டீஸ்வரி சதி எடுபடுமா?
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் - ரேவதி மகிழ்ச்சியாக இருக்கும் சூழலில் சாமுண்டீஸ்வரி செய்யும் சதி அரங்கேறுமா? என்பதை கீழே காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரேவதி ஜோடியாக ஆபிஸ்க்கு வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக் - ரேவதி கிண்டல்:
அதாவது, கார்த்திக் ரேவதியை அழைத்து ஒரு பைலை கொடுக்கிறான், மேலும் இப்போவே ஓபன் பண்ணி பார்த்துக்கோங்க. அப்புறம் லெட்டர் இருக்குனு திட்ட கூடாது என்று கலாய்க்க ரேவதி பழசை மனசுல வச்சிட்டு கலாய்க்காதீங்க சார் என்று சொல்கிறாள்.
அடுத்து ரேவதி வேலை விஷயமாக கப்போர்டை திறந்து பார்க்க உள்ளே பிரியா வைத்த பணக்கட்டுகள் இருக்க ஏதோ தப்பா இருக்கு என்று சந்தேகம் அடைகிறாள். கொஞ்ச நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனையிட வருகை தர ரேவதிக்கு பணம் நினைவுக்கு வந்து அதை எடுத்து மறைத்து வைக்கிறாள்.
ரேவதி கழுத்தில் தாலி விழுமா?
பிறகு சோதனையிட்ட வருமானவரித்துறையினர் தவறான தகவல் கிடைத்ததாக சொல்லி கிளம்பி செல்கின்றனர். பிறகு சாமுண்டீஸ்வரி தகவல் அறிந்து, ரேவதி ஏன் இப்படி பண்ணா என்று கடுப்பாகிறாள். பிறகு தாலியை மறைத்து வைத்து மாலையை எடுத்து கொண்டு கோவிலுக்கு செல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்






















