![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: பாக்யாவை தேடி வரும் புது சவால்...சாதிப்பாரா? சொதப்புவாரா? ...இன்றைய எபிசோட் இதோ..!
Bhagyalakshmi Serial Written Update Today (02.12.2022): இனியா மீண்டும் பாக்யா வீட்டுக்கு சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கோபி வீட்டுக்கு வருகிறார்.
![Bhagyalakshmi Serial: பாக்யாவை தேடி வரும் புது சவால்...சாதிப்பாரா? சொதப்புவாரா? ...இன்றைய எபிசோட் இதோ..! bhagyalakshmi serial written update today 2nd december 2022 episode 676 unexpectedly as Selvi nominates Baakiyalakshmi for the post of secretary Bhagyalakshmi Serial: பாக்யாவை தேடி வரும் புது சவால்...சாதிப்பாரா? சொதப்புவாரா? ...இன்றைய எபிசோட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/02/88a91d28fa77955b4b1d900d3adca08f1669961158696572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை தேடி வரும் புது சவாலை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற காட்சிகள் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.
அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
டென்ஷனான கோபி
இனியா மீண்டும் பாக்யா வீட்டுக்கு சென்று தன்னுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கோபி வீட்டுக்கு வருகிறார். அதேசமயம் இனியா தன்னிடம் சவால் விட்டு சென்ற நிலையில் ராதிகா கோபியிடம் சொல்ல, இருவருக்குள்ளும் நீண்ட வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் நான் இப்பவே அந்த வீட்டுக்குப் போய் என் மகளை கூட்டிட்டு வர்றேன் என சொல்லும் சமயத்தில் இனியா உள்ளே வருகிறார்.
அவரிடம் அப்பா இல்லாத நேரத்துல ஏன் அந்த வீட்டுக்கு போற..உனக்கு என்ன வேணுமோ நான் வாங்கி தர்றேன் என சொல்லி ரூமுக்கு போக சொல்கிறார். அங்கிருந்து நகரும் போது ராதிகாவை பார்த்து முறைத்து விட்டு இனியா செல்கிறார். இதனால் கடுப்பாகும் ராதிகா கோபியிடம் இதுபற்றி கோபப்படுகிறார். இதையெல்லாம் ராமமூர்த்தி வேடிக்கை பார்க்கிறார்.
View this post on Instagram
பாக்யாவுக்கு வந்த சவால்
ஏரியா செகரட்டரி சார்பில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்கின்றனர். ராமமூர்த்தி, பாக்யா, செல்வி என பங்கேற்க அந்த மீட்டிங்கில் சரமாரியாக வாக்குவாதம் ஏற்படுகிறது. இறுதியாக இந்த முறை செகரட்டரியாக பெண்களை நிற்க வைக்கலாம் என முடிவாகி அதில் பாக்யா அந்த பதவிக்கு போட்டியிட வைக்கலாம் என அனைவரும் முடிவெடுக்கின்றனர். அதற்கு போட்டியாக தற்போது உள்ள செகரட்டரி தன் மனைவியை களமிறக்குவதாக கூறுகிறார். இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)