![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhagyalakshmi Serial: பாக்யாவுக்கு நேர்ந்த அநீதி...ராதிகாவிடம் சண்டைக்கு சென்ற ராமமூர்த்தி.. இன்றைய எபிசோட் இதோ..!
Bhagyalakshmi Serial Written Update Today (19.12.2022): ராதிகாவிடம் நேரடியாகவே பாக்யாவுக்கு நேர்ந்த அநீதி குறித்து ராமமூர்த்தி கேட்கிறார். உடனே கோபி ராதிகாவுக்கு சப்போர்ட் செய்கிறார்.
![Bhagyalakshmi Serial: பாக்யாவுக்கு நேர்ந்த அநீதி...ராதிகாவிடம் சண்டைக்கு சென்ற ராமமூர்த்தி.. இன்றைய எபிசோட் இதோ..! bhagyalakshmi serial written update today 19th december 2022 episode 690 Ramamoorthy confronts Radhika for interfering in Baakiyalakshmis business Bhagyalakshmi Serial: பாக்யாவுக்கு நேர்ந்த அநீதி...ராதிகாவிடம் சண்டைக்கு சென்ற ராமமூர்த்தி.. இன்றைய எபிசோட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/19/1baa2fcf7e385f2bf1c7071e7520449f1671423699800572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவுக்கு கேண்டீன் ஆர்டர் கேன்சல் ஆக ராதிகா தான் காரணம் என்ற உண்மை அவரது குடும்பத்தினருக்கு தெரிய வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.
ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.
இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
உண்மையை சொன்ன பாக்யா
கேண்டீன் ஆர்டர் கேன்சல் ஆனதை தெரிவித்த பாக்யாவை ஈஸ்வரி கடுமையாக விமர்சிக்கிறார். கோபி சொல்றதுல்ல தப்பே இல்லை. நீ அகலக்கால் வைக்கிற.. நீ நிம்மதியா இருக்கணும்ன்னு நினைக்கிறியா என திட்டி விட்டு செல்கிறார். செழியனும் தன் பங்குக்கு இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னனே என கடிந்து கொள்கிறார். ஆனால் எழில் பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறார். பின்னர் செல்வியிடம் ராதிகா தான் ஆர்டர் கிடைக்காமல் போனதுக்கு காரணம் என தெரிவிக்கிறார். இதனால் அவர் டென்ஷனாகிறார்.
இதனையடுத்து வீட்டுக்கு வரும் ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி நீங்கதானே ஆர்டர் எடுக்க பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணீங்க. இப்ப எல்லாம் கேன்சல் ஆயிடுச்சி என கொந்தளிக்கிறார். அப்போது செல்வி ராதிகா தான் இதுக்கெல்லாம் காரணம் என்ற உண்மையை போட்டுடைக்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடையும் ஈஸ்வரி யாரு, என்னன்னு கேட்டு செய்ய மாட்டிங்களா என பேச, ராஜசேகர் சொன்னாருன்னு தான் நாங்க போனோம் என பாக்யா தெரிவிக்கிறார்.
பாக்யாவுக்காக களமிறங்கிய ராமமூர்த்தி
இதனைத் தொடர்ந்து தன் வீட்டுக்கு வரும் ராமமூர்த்தியிடம் எங்கே போயிட்டு வர்றீங்க என கோபி கேட்க, என் பொண்டாட்டி, மருமகளை போய் பார்த்துட்டு வர்றேன் என சொல்ல, கோபி கோபப்படுகிறார். பின்னர் ராதிகாவிடம் நேரடியாகவே பாக்யாவுக்கு நேர்ந்த அநீதி குறித்து ராமமூர்த்தி கேட்கிறார். உடனே கோபி ராதிகாவுக்கு சப்போர்ட் செய்ய, நீயும் இப்படி செய்வன்னு நான் எதிர்பார்க்கல என சொல்கிறார். ஆனால் பெரிய கம்பெனியிடம் இது கொடுக்கலாம்ன்னு நினைச்சேன். சாப்பாடு சரியில்லன்னா என்னை தான் கேப்பாங்க என சொல்ல, இதனால் கடுப்பாகும் ராமமூர்த்தி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி எத்தனை டைம் டீச்சர் உங்க சாப்பாடு சூப்பர்ன்னு சொல்லிருப்ப, அவ எத்தனை நாள் உங்க வீட்டுக்கு டிபன் பாக்ஸோட வந்துருப்பா. இப்படி பேசுறீயேமா என தன் கோபத்தை கொட்டுகிறார்.
வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை
பின்னர் மண்டப ஓனர் ராஜசேகரை பார்த்து கேண்டீன் ஆர்டருக்காக வாங்கின பணத்தில், தற்சமயம் கையில் இருக்கும் தொகையை கொடுக்க நினைக்க, அவர் பாக்யாவுக்கு வேலையில் இருக்கும் சவாலை எடுத்துச் சொல்லி திருப்பி அனுப்புகிறார். இதனையடுத்து வீட்டில் எழில் சோகமாக இருப்பதையும், வர்ஷினி சொன்னதைப் பற்றியும் ஈஸ்வரி சிந்தித்து கொண்டிருக்கிறார். அப்போது யாருக்கோ போன் செய்து முகம் சோகமாக மாறுவதை செழியன், ஈஸ்வரி கவனிக்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)