மேலும் அறிய

33 Years of Inaindha Kaigal: மாஸ் இன்டர்வெல் காட்சி .. தமிழ் சினிமாவில் புரட்சி பண்ணிய ‘இணைந்த கைகள்’..33 ஆண்டுகள் நிறைவு..!

தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் புரட்சி பண்ணிய படங்களில் ஒன்றான இணைந்த கைகள் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்த சிறப்பு பதிவு ஒன்றை காணலாம். 

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் புரட்சி பண்ணிய படங்களில் ஒன்றான இணைந்த கைகள் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்த சிறப்பு பதிவு ஒன்றை காணலாம். 

சாதித்த திரைப்படக் கல்லூரி மாணவர்

திரைப்படக் கல்லூரி மாணவர்களால்  கமர்சியல் சினிமாவை எடுத்து சாதிக்க முடியாது என்ற கூற்றை முழுமையாக உடைத்தவர் ஆபாவாணன். தங்களாலும் வணிக ரீதியிலான வெற்றி படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்து காட்டினார். அவரைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களாக இருந்த பலரும் இன்றைக்கும் பல துறைகளில் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். 

அப்படிப்பட்ட ஆபாவாணன் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே என வரிசையாக ஹிட் கொடுத்தார். இதற்கு முழு காரணம் விஜயகாந்த் தான். நம்பிக்கை வைத்து அவர் கொடுத்த ஊக்கத்தால் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரானார் ‘ஆபாவாணன்’. அவர் 1990 ஆம் ஆண்டில் வளர்ந்து கொண்டிருந்த ராம்கி, அருண்பாண்டியன் இருவரையும் ஹீரோக்களாக்கி ‘இணைந்த கைகள்’ என்ற படத்தை இயக்கினார். மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை இப்போது பார்த்தாலும் புல்லரித்து விடும். 

ஆஸ்கர் வென்றதன் மூலம் உலகளவில் பிரபலமான ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அதாவது பாலம் ஒன்றில் ஒருமுனையில் ஹீரோக்கள் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் கயிற்றில் தொங்கியபடி கைகளை பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். இதனைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் இது ‘இணைந்த கைகள்’ படத்தில் வருவது தானே என சிலாகித்தார்கள். 

இணைந்த கைகள் படத்தில் அருண்பாண்டியன், ராம்கி, நிரோஷா, நாசர், ஸ்ரீவித்யா, பிரபாகரன், சிந்து, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கியான் வர்மா இப்படத்திற்கு இசையமைத்தார். 

படத்தின் கதை 

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் கைது செய்யப்படுகிறார் பிரபாகரன். அவரது தாயான, ராணுவ மருத்துவர் ஸ்ரீவித்யா வீண் பழி சுமத்தப்பட்டு வீட்டுச் சிறையில் இருக்கிறார். இப்படியான நிலையில் தன் மகனை மீட்க,  மேஜர் அருண்பாண்டியன் உதவியை நாடுகிறார். இந்த பக்கம் வில்லன் நாசர், பிரபாகரனை கொலை செய்ய கிரிமினலான ராம்கியை அனுப்புகிறார். இவர்கள் இருவரில் பெற்றி பெற்றது யார் என்பது இப்படத்தின் கதை. 

இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தின் சண்டை காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குறுப்பாக நதிப்பாலம், கூடைப்பந்து மைதானம், ரயில் நிலைய காட்சி என அனைத்தும் பாராட்டைப் பெற்றது. 

அதேபோல் அந்தி நேரத் தென்றல் காற்று, மலையோரம் குயில் கூவ கேட்டேன் உள்ளிட்ட பாடல்களும் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படத்தின் டைட்டிலைப் போலவே இந்த படம் இந்த படம் என்றும் ரசிகர்களின் மனதில் இணைந்திருக்கும் என்பதே உண்மை. 

தலைப்பு செய்திகள்

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
மஞ்சணத்தி படத்தில் கயடு லோஹர்! மீண்டும் கிளம்பிய நிற சர்ச்சை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

வீடியோ

Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
Nellai brother murdered sister | காதலித்த அக்காவை வெட்டி கொலை செய்த தம்பி! நெல்லையில் பகீர் சம்பவம்
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
CM Vijay: முதலமைச்சராக ஒரு மாதத்தை நிறைவு செய்த விஜய்.. நிகழ்ந்த மாற்றங்கள்.. ஒரு ரீவைண்ட்!
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
EPS: ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கும் சென்சார் போர்டா? தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
படுத்த படுக்கையில் பாஜக; நிர்வாகிகளுக்கு ஐடியா மேல் ஐடியா கொடுத்த நயினார் நாகேந்திரன் - என்ன?
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
பிட்டு படம் எடுத்திருக்கான் என்று கலாய்த்த நண்பன்..ஆதிக்கிற்கு ஆதரவாக விஜய் கொடுத்த செம ரிப்ளை
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
Singappen Task Force: இந்தியாவில் முதல்முறை; சீறும் சிங்கப்பெண்கள்- சிறப்பு அதிரடி படையை தொடங்கிவைத்த சிஎம் விஜய்!  
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
6 மாதத்திற்கு முன்பே தவெக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்தது ஏன்? முன்னாள் அமைச்சர் தந்த விளக்கம்!
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
மணல் கடத்தல் லாரியால் வந்த வினை - காவல் நிலையம் செல்லும் வழியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் கோயில் போலி டிக்கெட் மோசடி: முன்ஜாமின் வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Embed widget