Suriya | மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சூர்யா?...மலையாள இயக்குநருடன் கூட்டணி! - பேக் டு பேக் அப்டேட்!
இந்நிலையில் புதிய படத்தில் சூர்யா மற்றும் கமல்ஹாசனை இணைக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியாக இருந்தால் , நிச்சயம் அந்த படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

தென்னிந்திய சினிமாவில் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. சமீப காலமாக சூர்யா கையில் எடுக்கும் படங்கள் அனைத்துமே அழுத்தமான சமூக கருத்துகளை முன்வைக்கின்றன. இது அவர் மீதான கூடுதல் மரியாதையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றாலும் அடுத்தடுத்த படத்தேர்வுகளுக்கான கூடுதல் பொறுப்பையும் அதிகரித்துள்ளது என்றால் மிகையில்லை. சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் நாளை (மார்ச் 10) வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் சூழலில் , அண்மையில் கேரளாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சூர்யா. அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பிரபல மலையாள இயக்குநர் அமர் நீரத்திடம் கதை கேட்டிருப்பதாக ரிவீல் செய்து கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் சூர்யா.
View this post on Instagram
அமர் நீரத் இயக்குநர் மட்டுமல்ல ஒளிப்பதிவாளரும் கூட. முன்னதாக அவர் சூர்யாவை வைத்து ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் இந்த கூட்டணி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமர் நீரத்தின் இயக்கத்தில் வெளியான ஐயோபின்டே புத்தகம், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் மற்றும் டிரான்ஸ் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதோடு சமீபத்தில் இவரது இயக்கத்தில் , மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பீஷ்ம பர்வம்' திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் புதிய படத்தில் சூர்யா மற்றும் கமல்ஹாசனை இணைக்கும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியாக இருந்தால் , நிச்சயம் அந்த படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இது ஒருபுறம் இருக்க , சூர்யா ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . அதோடு இயக்குநர் பாலாவுடனும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். பாலா இயக்கத்தில் பிதா மகனுக்கு பிறகு மீண்டும் சூர்யா நடிப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் , படத்தில் சூர்யா மாற்று திறனாளியாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. பாலா எப்போதுமே எதார்த்தம் மாறாமல் படம் எடுக்கும் படைப்பாளி. அவரது படத்தில் நடிகர்களின் உச்சபட்ச நடிப்பை வெளிக்கொண்டுவருவாரே தவிர , மேக்கப் , அழகு , அலங்காரம் என்பதற்கே வேலை இருக்காது. இந்த சூழலில் சூர்யா காது , வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞராக புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















