மேலும் அறிய

Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : சிறப்பு அதிகாரி தர்ஷினி வீடியோவை பற்றி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஜனனி. சுயநினைவு இல்லாமல் புலம்பும் தர்ஷினியை பார்த்து அதிர்ச்சி அடையும் கடத்தல்காரன். எதிர்நீச்சலில் இன்று .  

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் குணசேகரனை தேடி ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார். விசாலாட்சி அம்மாவிடம் சொல்லி அனைவரையும் அழைத்து சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்ல சொல்கிறார். ஆவேசமாக வந்த கதிரும் ஞானமும்  சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.


அடுத்ததாக தர்ஷனை அழைத்து கையெழுத்து போட சொல்கிறார். ஆதிரை அவன் போட மாட்டான் என சொல்ல "எனக்கு இது எதுவுமே தேவையில்லை. என்னை யாரும் தடுக்காதீங்க" என சொல்லி கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறான் தர்ஷன். "இனிமேல் அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே இனி நான் தான்" என ஆணவமாக சொல்கிறார் குணசேகரன்.

 

Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று

அந்த நேரத்தில் வக்கீல் குணசேகரனுக்கு போன் செய்து ஜனனி சிஎம் செல் வரை சென்ற விவரத்தை சொல்ல குணசேகரன் டென்ஷனாகிறார். "எங்க வேணும்னாலும் யாரை வேணும்னாலும் போய் பாருங்க. உண்மை ஒரு நாள் வெளியில் வரும்" என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார் குணசேகரன்.

ஜனனியும் சக்தியும் தர்ஷினி கேஸை விசாரிக்க வரும் அதிகாரியை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள். அவர் வந்ததும் ஜனனியிடம் அறிமுகம் செய்து கொண்டு மேல் அதிகாரியை பார்ப்பதற்காக அழைத்து செல்கிறார். ஏற்கனவே விசாரித்த இன்ஸ்பெக்டர் வந்ததும், ஜீவானந்தம் எஸ்கேப்பான விஷயத்தை பற்றி சொல்லி வார்ன் செய்யவும், அதை கேட்டு ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். "இன்னும் மூணு நாளில் நான் அந்த பொண்ணை கண்டுபிடிக்கிறேன் அப்படி இல்லை என்றால் அந்த பொண்ணு இல்லை" என ஸ்பெஷல் ஆபீஸர் சொல்கிறார். அவருடன் ஜனனி மட்டும் செல்கிறாள்.

வீரசங்கிலி என்ற ஒரு ரவுடி தான் தர்ஷினியை கடத்தி வைத்து இருக்கிறான். புது இடத்தில் தர்ஷினியை அடைத்து வைத்து இருக்கிறார்கள். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் வீரசங்கிலியின் கூட்டாளி ஒரு பெண்ணிடம் தான் தர்ஷினியை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. மிகவும் பயங்கரமாக தர்ஷினியை மிரட்டி வைத்திருக்கிறாள் அந்த பெண் ரவுடி. அவள் மிரட்டிய மிரட்டலில் "நீங்க சொல்றதை நான் சொல்லிடுறேன். என்னை எங்கம்மா ஈஸ்வரி கிட்ட மட்டும் விட்டுருங்க ப்ளீஸ்" என சுயநினைவு இல்லாமல் காயங்களுடன் படுத்து இருக்கும் தர்ஷினி புலம்புகிறாள். அதை பார்த்த வீரசங்கிலி அதிர்ச்சி அடைகிறான்.  
 
Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று

சிறப்பு அதிகாரி கொன்றவை ஜனனியிடம் தர்ஷினி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். "தர்ஷினியோட வீடியோவை பார்க்கும் போது அவர் சுய நினைவிலேயே இல்லை என்பது தெரிகிறது. மென்டலி, எமோஷனலி வீக்கா இருக்கா" என கொன்றவை சொல்ல அதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.
 



வீட்டில் ஞானம்,குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கிறான். "உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்?" என குணசேகரன் திமிராக பேச "சொல்லணும் அண்ணன். எங்களுக்கு எல்லாருக்கும் இதுல சம்பந்தம் இருக்கு. சொல்லி தான் ஆகணும்" என ஆவேசமாக ஞானம் பேச மிகவும் ஆணவமாக குணசேகரன் பேசுகிறார். அவர் பேசுவதை பார்த்த விசாலாட்சி அம்மாவே அதிர்ச்சி அடைகிறார். அவரின் தம்பி சாமியாடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் சுற்றி நின்று குணசேகரனை கேள்வி கேட்கிறார்கள். என்ன சொல்வதென தெரியாமல் அவர்களை அடக்க முயற்சிக்கிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.

தலைப்பு செய்திகள்

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்
இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி படம் குறித்து அர்ஜூன் தாஸ்
பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்த ரவிமோகன்..என்ன நடந்தது?
பணிப்பெண்களை தனது வீட்டில் சிறைபிடித்து வைத்த ரவிமோகன்..என்ன நடந்தது?
CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Embed widget