மேலும் அறிய

Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : சிறப்பு அதிகாரி தர்ஷினி வீடியோவை பற்றி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் ஜனனி. சுயநினைவு இல்லாமல் புலம்பும் தர்ஷினியை பார்த்து அதிர்ச்சி அடையும் கடத்தல்காரன். எதிர்நீச்சலில் இன்று .  

 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் குணசேகரனை தேடி ஆடிட்டர் வீட்டுக்கு வருகிறார். விசாலாட்சி அம்மாவிடம் சொல்லி அனைவரையும் அழைத்து சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க சொல்ல சொல்கிறார். ஆவேசமாக வந்த கதிரும் ஞானமும்  சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறார்கள்.


அடுத்ததாக தர்ஷனை அழைத்து கையெழுத்து போட சொல்கிறார். ஆதிரை அவன் போட மாட்டான் என சொல்ல "எனக்கு இது எதுவுமே தேவையில்லை. என்னை யாரும் தடுக்காதீங்க" என சொல்லி கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறான் தர்ஷன். "இனிமேல் அவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாமே இனி நான் தான்" என ஆணவமாக சொல்கிறார் குணசேகரன்.

 

Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று

அந்த நேரத்தில் வக்கீல் குணசேகரனுக்கு போன் செய்து ஜனனி சிஎம் செல் வரை சென்ற விவரத்தை சொல்ல குணசேகரன் டென்ஷனாகிறார். "எங்க வேணும்னாலும் யாரை வேணும்னாலும் போய் பாருங்க. உண்மை ஒரு நாள் வெளியில் வரும்" என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார் குணசேகரன்.

ஜனனியும் சக்தியும் தர்ஷினி கேஸை விசாரிக்க வரும் அதிகாரியை பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள். அவர் வந்ததும் ஜனனியிடம் அறிமுகம் செய்து கொண்டு மேல் அதிகாரியை பார்ப்பதற்காக அழைத்து செல்கிறார். ஏற்கனவே விசாரித்த இன்ஸ்பெக்டர் வந்ததும், ஜீவானந்தம் எஸ்கேப்பான விஷயத்தை பற்றி சொல்லி வார்ன் செய்யவும், அதை கேட்டு ஜனனியும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். "இன்னும் மூணு நாளில் நான் அந்த பொண்ணை கண்டுபிடிக்கிறேன் அப்படி இல்லை என்றால் அந்த பொண்ணு இல்லை" என ஸ்பெஷல் ஆபீஸர் சொல்கிறார். அவருடன் ஜனனி மட்டும் செல்கிறாள்.

வீரசங்கிலி என்ற ஒரு ரவுடி தான் தர்ஷினியை கடத்தி வைத்து இருக்கிறான். புது இடத்தில் தர்ஷினியை அடைத்து வைத்து இருக்கிறார்கள். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் வீரசங்கிலியின் கூட்டாளி ஒரு பெண்ணிடம் தான் தர்ஷினியை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. மிகவும் பயங்கரமாக தர்ஷினியை மிரட்டி வைத்திருக்கிறாள் அந்த பெண் ரவுடி. அவள் மிரட்டிய மிரட்டலில் "நீங்க சொல்றதை நான் சொல்லிடுறேன். என்னை எங்கம்மா ஈஸ்வரி கிட்ட மட்டும் விட்டுருங்க ப்ளீஸ்" என சுயநினைவு இல்லாமல் காயங்களுடன் படுத்து இருக்கும் தர்ஷினி புலம்புகிறாள். அதை பார்த்த வீரசங்கிலி அதிர்ச்சி அடைகிறான்.  
 
Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று

சிறப்பு அதிகாரி கொன்றவை ஜனனியிடம் தர்ஷினி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார். "தர்ஷினியோட வீடியோவை பார்க்கும் போது அவர் சுய நினைவிலேயே இல்லை என்பது தெரிகிறது. மென்டலி, எமோஷனலி வீக்கா இருக்கா" என கொன்றவை சொல்ல அதை கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைகிறாள்.
 



வீட்டில் ஞானம்,குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கிறான். "உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்?" என குணசேகரன் திமிராக பேச "சொல்லணும் அண்ணன். எங்களுக்கு எல்லாருக்கும் இதுல சம்பந்தம் இருக்கு. சொல்லி தான் ஆகணும்" என ஆவேசமாக ஞானம் பேச மிகவும் ஆணவமாக குணசேகரன் பேசுகிறார். அவர் பேசுவதை பார்த்த விசாலாட்சி அம்மாவே அதிர்ச்சி அடைகிறார். அவரின் தம்பி சாமியாடியும் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் சுற்றி நின்று குணசேகரனை கேள்வி கேட்கிறார்கள். என்ன சொல்வதென தெரியாமல் அவர்களை அடக்க முயற்சிக்கிறார் குணசேகரன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget