மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

Ethirneechal :ரேணுகாவை வம்புக்கு இழுக்கும் விசாலாட்சி அம்மா. வீர சங்கிலி போனில் குணசேகரன் பேசியதை கேட்டுவிட்ட தர்ஷினி. இன்று என்ன நடக்கப்போகிறது எதிர்நீச்சலில்? 



சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 28) எபிசோடில் ஞானம் தன்னுடைய நிலையை நினைத்து நொந்து போய் பேசுகிறான். அண்ணன் தம்பி ஒன்றாக சேர்ந்து விட்டால் அதிலொருவர் மீண்டும் குணசேகரனாக மாறி விடுவார் என்பது தான் இந்த வீட்டு பெண்களின் எண்ணம் என சொல்லி அழுகிறான். கதிர் மிகவும் பாசமாக உரிமையுடன் ஞானத்திடம் பேசுகிறான். "அண்ணன் தம்பிக்குள் நான் இனிமேல் வரமாட்டேன். நீங்க உங்க தம்பிக்கு என்ன வேணாலும் செய்யுங்க. நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க. இதுக்கு மேல இதை பத்தி பேசுனா தப்பாகிடும். இப்போ தயவு செய்து சாப்பிட வாங்க" என சொல்லிவிட்டு சென்று விடுகிறாள் நந்தினி.

 

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்


அடுத்த நாள் குணசேகரன் தான் மறைமுகமாக ஒளித்து வைத்து இருக்கும் போனில் இருந்து வீர சங்கிலிக்கு போன் செய்கிறார். "என்னோட பிள்ளை எப்படி இருக்கு?" என கேட்கிறார். "நீங்க சொல்லி கொடுத்த மாதிரி அவங்க அம்மா தான் கடத்திவைச்சு இருக்கா அதுக்கு ஜீவானந்தம் தான் உடந்தைன்னு அன்னிக்கு வீடியோவுல பேசின மாதிரியே புலம்பிகிட்டு இருக்கு" என வீர சங்கிலி சொல்கிறான். திமிராக குணசேகரன் பேசுவதை கேட்டு கோபமடையும் வீர சங்கிலி எக்கச்சக்கமாக குடிக்கிறான்.

பின்னர் ஜான்சியையும், கரிகாலனையும் அவர் இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார். கரிகாலன் பயமாக குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுவது போல நடிக்கிறான். "நான் சொன்ன நீ வரணும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது. உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்வேன். நீ தான் என் வீட்டு மாப்பிள்ளை" என சொல்லி கரிகாலனை தன்னுடன் அழைத்து செல்கிறார் குணசேகரன்.

 

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

வீர சங்கிலி குணசேகரன் மீது இருக்கும் கோபத்தை தர்ஷினி மீது காட்டுவதற்காக அவள் இருக்கும் இடத்திற்கு சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அங்கு தர்ஷினியை பார்த்து கொள்ளும் பெண் வீர சங்கிலியை அங்கிருந்து விரட்டி விடுகிறாள். தர்ஷினி பழைய மாதிரியே பயத்தில் புலம்புகிறாள். வீர சங்கிலி குடிபோதையில் தன்னுடைய செல் போனை அங்கேயே விட்டுவிட்டு போய் விடுகிறான்.

ரேணுகா வீட்டுக்கு திரும்பி வருகிறாள். கதிர் பாசமாக பேசுவதை பார்த்து ரேணுகா சந்தோஷப்படுகிறாள். உள்ளே நுழையும் போது விசாலாட்சி அம்மா ரேணுகாவை திமிராக அழைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனியின் அப்பத்தா ரேணுகாவை பார்த்து "உங்க அம்மா என்ன பேச்சு பேசுனா? நல்லா அனுபவிக்கட்டும்" என திமிராக சொல்ல "போதும் நிறுத்துங்க. எல்லாரும் அனுபவிக்க தான் போறாங்க" என ரேணுகா சரியான பதிலடி கொடுத்துவிட்டு போகிறாள்.

 

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

ரேணுகாவிடம் ஞானம் வீட்டில் நடந்தை பற்றி சொல்லி வருத்தப்படுகிறேன். "பீஸ் கட்ட பணம் தானே கொடுத்தேன். இதுக்காக எல்லாரும் என்னை குணசேகரனா மாறிடுவேன்னு சொன்ன கஷ்டமா இருக்கு" என சொல்லி அழுகிறான். அவனை ரேணுகாவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து சமாதான படுத்துகிறார்கள்.

 



வீர சங்கிலிக்கு போன் செய்கிறார் குணசேகரன். "டேய் வீர சங்கிலி நான் தான்டா குணசேகரன் பேசுறேன். பிள்ளைக்கு கல்யாண வேலை பண்ணிக்கிட்டு இருக்கேன். நானே வந்து அந்த பிள்ளையை கூட்டிட்டு போயிடுறேன்" என சொல்கிறார். இதை அனைத்தையும் மயக்கத்தில் இருந்த தர்ஷினி போனை எடுத்து கேட்டு விடுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
Embed widget