மேலும் அறிய

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

Ethirneechal :ரேணுகாவை வம்புக்கு இழுக்கும் விசாலாட்சி அம்மா. வீர சங்கிலி போனில் குணசேகரன் பேசியதை கேட்டுவிட்ட தர்ஷினி. இன்று என்ன நடக்கப்போகிறது எதிர்நீச்சலில்? 



சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 28) எபிசோடில் ஞானம் தன்னுடைய நிலையை நினைத்து நொந்து போய் பேசுகிறான். அண்ணன் தம்பி ஒன்றாக சேர்ந்து விட்டால் அதிலொருவர் மீண்டும் குணசேகரனாக மாறி விடுவார் என்பது தான் இந்த வீட்டு பெண்களின் எண்ணம் என சொல்லி அழுகிறான். கதிர் மிகவும் பாசமாக உரிமையுடன் ஞானத்திடம் பேசுகிறான். "அண்ணன் தம்பிக்குள் நான் இனிமேல் வரமாட்டேன். நீங்க உங்க தம்பிக்கு என்ன வேணாலும் செய்யுங்க. நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சுடுங்க. இதுக்கு மேல இதை பத்தி பேசுனா தப்பாகிடும். இப்போ தயவு செய்து சாப்பிட வாங்க" என சொல்லிவிட்டு சென்று விடுகிறாள் நந்தினி.

 

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்


அடுத்த நாள் குணசேகரன் தான் மறைமுகமாக ஒளித்து வைத்து இருக்கும் போனில் இருந்து வீர சங்கிலிக்கு போன் செய்கிறார். "என்னோட பிள்ளை எப்படி இருக்கு?" என கேட்கிறார். "நீங்க சொல்லி கொடுத்த மாதிரி அவங்க அம்மா தான் கடத்திவைச்சு இருக்கா அதுக்கு ஜீவானந்தம் தான் உடந்தைன்னு அன்னிக்கு வீடியோவுல பேசின மாதிரியே புலம்பிகிட்டு இருக்கு" என வீர சங்கிலி சொல்கிறான். திமிராக குணசேகரன் பேசுவதை கேட்டு கோபமடையும் வீர சங்கிலி எக்கச்சக்கமாக குடிக்கிறான்.

பின்னர் ஜான்சியையும், கரிகாலனையும் அவர் இருக்கும் இடத்திற்கு வர சொல்கிறார். கரிகாலன் பயமாக குணசேகரனுக்கு சப்போர்ட்டாக பேசுவது போல நடிக்கிறான். "நான் சொன்ன நீ வரணும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது. உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்வேன். நீ தான் என் வீட்டு மாப்பிள்ளை" என சொல்லி கரிகாலனை தன்னுடன் அழைத்து செல்கிறார் குணசேகரன்.

 

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

வீர சங்கிலி குணசேகரன் மீது இருக்கும் கோபத்தை தர்ஷினி மீது காட்டுவதற்காக அவள் இருக்கும் இடத்திற்கு சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அங்கு தர்ஷினியை பார்த்து கொள்ளும் பெண் வீர சங்கிலியை அங்கிருந்து விரட்டி விடுகிறாள். தர்ஷினி பழைய மாதிரியே பயத்தில் புலம்புகிறாள். வீர சங்கிலி குடிபோதையில் தன்னுடைய செல் போனை அங்கேயே விட்டுவிட்டு போய் விடுகிறான்.

ரேணுகா வீட்டுக்கு திரும்பி வருகிறாள். கதிர் பாசமாக பேசுவதை பார்த்து ரேணுகா சந்தோஷப்படுகிறாள். உள்ளே நுழையும் போது விசாலாட்சி அம்மா ரேணுகாவை திமிராக அழைக்கிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஜனனியின் அப்பத்தா ரேணுகாவை பார்த்து "உங்க அம்மா என்ன பேச்சு பேசுனா? நல்லா அனுபவிக்கட்டும்" என திமிராக சொல்ல "போதும் நிறுத்துங்க. எல்லாரும் அனுபவிக்க தான் போறாங்க" என ரேணுகா சரியான பதிலடி கொடுத்துவிட்டு போகிறாள்.

 

Ethirneechal: குணசேகரன் முகமூடி கிழிந்தது! உண்மையை அறிந்து கொண்ட தர்ஷினி... சஸ்பென்ஸாக நகரும் எதிர்நீச்சல்

ரேணுகாவிடம் ஞானம் வீட்டில் நடந்தை பற்றி சொல்லி வருத்தப்படுகிறேன். "பீஸ் கட்ட பணம் தானே கொடுத்தேன். இதுக்காக எல்லாரும் என்னை குணசேகரனா மாறிடுவேன்னு சொன்ன கஷ்டமா இருக்கு" என சொல்லி அழுகிறான். அவனை ரேணுகாவும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து சமாதான படுத்துகிறார்கள்.

 



வீர சங்கிலிக்கு போன் செய்கிறார் குணசேகரன். "டேய் வீர சங்கிலி நான் தான்டா குணசேகரன் பேசுறேன். பிள்ளைக்கு கல்யாண வேலை பண்ணிக்கிட்டு இருக்கேன். நானே வந்து அந்த பிள்ளையை கூட்டிட்டு போயிடுறேன்" என சொல்கிறார். இதை அனைத்தையும் மயக்கத்தில் இருந்த தர்ஷினி போனை எடுத்து கேட்டு விடுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ.

தலைப்பு செய்திகள்

நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
Bhagyaraj Autobiography : மரணத்திற்கு முன் சுயசரிதையை வைரமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு சென்ற பாக்யராஜ்!
Bhagyaraj Autobiography : மரணத்திற்கு முன் சுயசரிதையை வைரமுத்துவிடம் ஒப்படைத்துவிட்டு சென்ற பாக்யராஜ்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
வானிலை அலர்ட்: தமிழகத்தில் ஜூலை 12 வரை கொட்டப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு ? முழு விபரம் உள்ளே!
Minister Keerthana : ’What is your father?’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்..!
'English ல பேச தெரியாதா?’ புதிய சர்ச்சையில் அமைச்சர் கீர்த்தனா
Embed widget