![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sobhita Dhulipala: அழகா இல்ல, வெள்ளையா இல்லனு சொன்னாங்க... ‘பொன்னியின் செல்வன்’ ஷோபிதா வேதனை..!
தற்போது பிரபல நடிகையாக விளங்கும் ஷோபிதா தன் திரைப் பயணத்தில் தொடக்க காலங்களில் தான் நிராகரிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
![Sobhita Dhulipala: அழகா இல்ல, வெள்ளையா இல்லனு சொன்னாங்க... ‘பொன்னியின் செல்வன்’ ஷோபிதா வேதனை..! Sobhita Dhulipala Recalls Her Early Struggles When She Was Told She Wasnt Fair Or Pretty Enough Sobhita Dhulipala: அழகா இல்ல, வெள்ளையா இல்லனு சொன்னாங்க... ‘பொன்னியின் செல்வன்’ ஷோபிதா வேதனை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/24/04bb9b4968f7bd2528ad12f4fb98776e1687613261285574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிஸ் இந்தியா பட்டம் பெற்ற பிறகும் தான் வெள்ளையாக இல்லை, அழகாக இல்லை என்றெல்லாம் கூறி நிராகரிக்கப்பட்டதாக நடிகை ஷோபிதா துலிபாலா தெரிவித்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' பட நடிகை:
பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஷோபிதா. பிரபல பாலிவுட் நடிகையான ஷோபிதா, பொன்னியின் செல்வன் பாகங்களில் வானதி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
மேலும் சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பிறகு நடிகை ஷோபிதாவுடன் இணைத்து நாகசைதன்யா கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்கள் மத்தியிலும் ஷோபிதா பேசுபொருளாகியுள்ளார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகையாக விளங்கும் ஷோபிதா தன் திரைப் பயணத்தில் தொடக்க காலங்களில் தான் நிராகரிக்கப்பட்டது குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
'அழகா இல்ல, வெள்ளையா இல்ல'
மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு ஷோபிதா பெற்ற நிலையில், அதன் பின்னரும் தான் அழகாக இல்லை, வெள்ளையாக இல்லை எனக்கூறி நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
"எனக்கு நியாபகம் இருக்கிறது, என் முகத்துக்கு நேராகவே நான் போதிய அளவு அழகாக இல்லை, வெள்ளையாக இல்லை எனக் கூறி நிராகரித்தனர். அதன் பின்னரே, ஒரு வெற்றிகரமான வணிகத் திரைப்பட தயாரிப்பாளருக்காக காத்திருக்காமல், நான் வேறுவிதமாக சிந்திக்கத் தொடங்கினேன். நான் ஆடிஷன்களுக்கு செல்வது என் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. எனது கட்டுப்பாட்டில் இருப்பது ஆடிஷனுக்குச் செல்வதுதான், அதற்கு நான் 100 சதவீதம் உழைப்பைக் கொடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இதேபோல் சமந்தா , நாகசைதன்யா இருவரிடமும் தான் ரசிக்கும் குணங்கள் குறித்து ஷோபிதா பேசியிருந்தார்.
வதந்திகளுக்கு பதில் தேவையில்லை:
முன்னதாக மற்றொரு நேர்க்காணலில் நடிகை சமந்தாவின் திரைப்பயணம் நன்றாக இருக்கிறது ஷோபிதா தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் நாகசைதன்யா பற்றி முதன்முறையாக மனம் திறந்த ஷோபிதா, அவருடைய சுபாவம் பிடிக்கும், அவர் மிகவும் அமைதியான பையன், மிகவும் கண்ணியமானவர். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன்" எனப் பேசியுள்ளார்.
மேலும் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு பதிலளித்திருந்த ஷோபிதா, “அறிவில்லாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாத நிலையில், இவற்றையெல்லாம் உணர வேண்டும் என நான் விரும்பவில்லை” என்று காட்டமாகப் பேசியிருந்தார்.
முன்னதாக ‘தி நைட் மேனேஜர்’ தொடரில் ஷோபிதா அனில் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஷோபிதா தற்போது மங்கி மேன் எனும் அமெரிக்க படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இந்தியில் சித்தாரா எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Actor Vijay Video: குழந்தைகளுடன் சேர்ந்துட்டா தளபதி எப்பவுமே க்யூட்தான் - நடிகை வெளியிட்ட வீடியோ வைரல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)