மேலும் அறிய

A R Rahman: ஆஸ்கர் வென்ற பாடலுக்கு இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் இல்லையா? பாடகர் சுக்விந்ர்சிங் பதில்

ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா சொன்னது உண்மையில்லை என்று பாடகர் சுக்விந்தர் சிங் கூறியுள்ளார்

ஆஸ்கர் வென்ற ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் தான் இசையமைத்தார் தான் அந்த பாடலை பாட மட்டுமே செய்தேன் என்று பாடகர் சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் குறித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறிய தகவல் சமுக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஜெய் ஹோ பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும் அந்தப் பாடலை பாடகர் சுக்விந்தர் சிங் தான் இசையமைத்தார் என்று ராம் கோபால் வர்மா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஆஸ்கர் நாயகன் என்று ரஹ்மானுக்கு புகழைச் சேர்த்த அந்தப் பாடலை ரஹ்மான் இசையமைக்கவில்லை என்கிற தகவல் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக ரஹ்மான் என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்படியான நிலையில் ராம் கோபால் வர்மா கூறியதை மறுத்து பாடகர் சுக்விந்தர் சிங் விளக்கமளித்துள்ளார்.

ஜெய் ஹோ பாடலுக்கு இசையமைத்தது யார்

”ஜெய் ஹோ பாடல் சுபாஷ் காய் இயக்கிய யுவராஜ் படத்திற்கு முதலில் உருவானது. குல்ஸார் தான் அந்தப் பாடலை எழுதியிருந்தார். அப்போது அந்த பாடலை நான் பாடவில்லை. அந்த பாடலை இயக்குநர் சுபாஷ் காய் இடம் ரஹ்மான் போட்டு காடினார். ஆனால் சுபாஷ் காய்க்கு அந்தப் பாடல் படத்திற்கு பொருத்தமானதாக தெரியவில்லை என்று கூறினார். பாட்டில் சில மாற்றங்கள் செய்யட்டுமா என்று ரஹ்மான் அவரிடம் கேட்டார். ஆனால் அந்தப் பாட்டையே மொத்தமாக மாற்ற வேண்டும் என்று சுபாஷ் காய் கேட்டுக் கொண்டார்.

இதன் பிறகு சுபாஷ் காய் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டார். ரஹ்மானும் சென்றுவிட்டார். ஸ்டூடியோவில் நானும் பாடலாசிரியர் குல்ஸார் மட்டுமே அந்த இடத்தில் இருந்தோம். குல்ஸாரை கொஞ்ச நேரம் வெளியே இருக்க சொல்லிவிட்டு அந்த பாடலை நான் ஸ்டுடியோவில் மனம் போன போக்கில் பாடினேன். பின் அதை ரஹ்மானுக்கு அனுப்பினேன். ரஹ்மான் அந்தப் பாடலை கேட்டுவிட்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குநர் டானி பாயலுக்கு அந்தப் பாடலை அனுப்பி வைத்தார். அப்படிதான் அந்தப் பாடல் உருவானது. ஜெய் ஹோ பாடல் முழுக்க முழுக்க ரஹ்மானின் திறமையால் உருவானது. நான் அதில் பாட மட்டும் தான் செய்தேன். ராம் கோபால் வர்மா நிச்சயமாக தவறாக எதையோ கேள்வி பட்டிருக்கிறார். “ என்று சுக்விந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

சுக்விந்தர் சிங் விளக்கமளித்தப் பின் ரஹ்மான் ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்துள்ளார்கள் என்று சொல்லலாம் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget