வைரமுத்துவும் எப்ஸ்டீனும் ஒன்னு ! ரஜினி கமலை விளாசிய சின்மயி !
ஞானபீடம் விருது பெற்றுள்ள வைரமுத்துவிற்கு ரஜினி கமல் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பின்னணி பாடகி சின்மயி இருவர் மீது விமர்சனம் வைத்துள்ளார்

பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு இலக்கியத்தின் உயரிய விருதான ஞானபீட விருதை இந்திய ஆரசு அறிவித்துள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் கவிஞருக்கு இந்த விருது வழக்கப்பட்டிருப்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனால் வைரமுத்துவிற்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். முன்னணி நட்சத்திரங்களான ரஜினி கமல் இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வைரமுத்துவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இதனை விமர்சித்து வைரமுத்து மீது பாலியல் குற்றம்சாட்டிய பின்னணி பாடகி சின்மயி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் அமெரிக்காவில் பிரபல பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் ஆதரவாளர்களுடன் ஒப்பிட்டு வைரமுத்து ஆதரவாளர்களை திட்டியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானவீட விருது திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கபப்ட்டுள்ளது. திரைத்துறையினர் இதனை ஒரு பெருமை மிகு நிகழ்வாக கருதுகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் " நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து . ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்." என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.
அதே போல் நடிகர் ரஜினிகாந்த் " நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞான பீட விருதைப் பெற்றிருக்கும் என் அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்." என்று பதிவிட்டுள்ளார்.
சின்மயி விமர்சனம்
பல்வேறு பெண்களால் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை தொடர்ச்சியாக ஆதரித்து வரும் திரைத்துறையினர் மீது சின்மயி தொடர்ச்சியாக தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கமல் வைரமுத்துவிற்கு பாராட்டுக்கள் தெரிவித்தது குறித்து சின்மயி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர் ஒருவருக்கு பதில் சொல்லியப்போது " பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன, 17 பெண்களால் குற்றம்சாட்டப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி வெளிப்படையாகப் புகழ்ந்து பேசுவது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் மண்டையில் ஏதாவது இருக்கிறதா? அப்படியென்றால் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் கொடூரங்களை பற்றி பேசாதீர்கள். உங்களுக்கும் அமெரிக்காவில் உள்ள எப்ஸ்டீன் ஆதரவாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்தியாவிற்கும் ஒரு எப்ஸ்டீன் ஃபைல்ஸ் வெளியாக வேண்டும். அப்போதுதான் உங்களுடைய எப்ஸ்டீனை காக்க நீங்கள் வருவீர்கள்.
அமெரிக்காவில் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபட்டிய பிரபல குற்றவாளி எப்ஸ்டீன். அண்மையில் எப்ஸ்டீன் விசாரணைக் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. இந்த கோப்புகளில் எப்ஸ்டீன் உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களுடன் அனுக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. ட்ரம்ப் , பில் கேட்ஸ் , ஒபாமா போன்ற முக்கிய பிரபலங்களின் பெயர்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளன. எப்ஸ்டீன் போன்ற ஒரு இவ்வளவு பெரிய ரகசிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியதற்கு அவரைச் சுற்றி இருந்த அரசியல் தலைவர்களின் பங்கு மிகப்பெரிய அளவு இருந்துள்ளது இந்த கோப்புகளின் வழியாக வெளியாகியுள்ளது. மேலும் சிலர் எப்ஸ்டீன் குற்றத்தை நியாயப்படுத்தும் விதமாகவும் பேசி வருகிறார்கள்.























