சிறுக சிறுக சேர்த்து வைத்த பல கோடி பணத்தை இழந்தேன் விமல் வேதனை!
சொந்தமாக தயாரித்த படம் தனக்கு தோல்வியை கொடுக்கவே, சினிமாவில் பல கோடி பணத்தை இழந்தேன் என்று நடிகர் விமல் கூறியுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கலகலப்பு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விமல். இந்தப் படத்திற்கு பிறகு கில்லி, கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம், தெனாவட்டு, பசங்க, களவாணி, தூங்கா நகரம், எத்தன, வாகை சூட வா, மாட்டுத்தாவணி, இஷ்டம், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் 25 ஆண்டுகள் பல வெற்றி தோல்விகளை கடந்த விமல் நடிப்பில் கடைசியாக வெளியான வெப் சீரிஸான 'ஓம் காளி ஜெய் காளி' தொடர் ஹாட் ஸ்டாரின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2, பரமசிவன் ஃபாத்திமா பெல்லடொன்னா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக நடித்து வந்தும் இன்னும் மாஸ் ஹீரோவாக வர முடியவில்லை. இந்த நிலையில் தான் சினிமாவில் ஒரு நடிகராக பல வெற்றி தோல்விகளை கொடுத்திருந்தாலும், ஒரு தயாரிப்பாளராகவும் தோல்வியை தழுவியதால், பல கோடி பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் சினிமாவால் தான் பல கோடி பணத்தை இழந்துவிட்டேன் என்று நடிகர் விமல் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "மஞ்சப்பை படத்திற்கு பிறகு எனக்கு எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. அப்படியிருக்கும் போது மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, அந்தப் படத்தில் நடிக்கவும் செய்தேன். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. சினிமாவில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பல கோடி பணத்தை அந்த படத்தின் மூலம் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்".
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

