மேலும் அறிய

”ஈஸ்வருக்கு பயம்.. என் பணத்தைக் கொடுக்காம நழுவ முடியாது” - வலுக்கும் ஜெயஸ்ரீ-ஈஷ்வர் பஞ்சாயத்து

"விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதனை திசை திருப்பவே ஈஸ்வர் இவ்வாறு செய்கிறார்."

சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்குமான சண்டை மீண்டும் பொதுவெளியில் வலுக்க தொடங்கியுள்ளது.

கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை, ஆஃபீஸ், ராஜா ராணி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்  ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை பூதகரமாக வெடித்தது.ஈஸ்வர் மகாலட்சுமி என்னும் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் தனது குழந்தை முன்பு தகாத முறையில் நடந்துக்கொள்வதாகவும் குற்றம் சாட்டினார் ஜெயஸ்ரீ.இதற்கு பதிலளித்த ஈஸ்வர் , ஜெயஸ்ரீ தன் மீது வீண் பழி சுமத்துவதாகவும் , பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பதிலுக்கு குற்றம் சாட்டினார்.  அதனை தொடர்ந்து ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பின் வெவ்வேறு தளங்களில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.


”ஈஸ்வருக்கு பயம்.. என் பணத்தைக் கொடுக்காம நழுவ முடியாது” - வலுக்கும் ஜெயஸ்ரீ-ஈஷ்வர் பஞ்சாயத்து

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து, தன்னை விட 6  வயது சிறிய ராகவேஷ் என்னும் மருத்துவருடன்  ஜெயஸ்ரீ Live - In உறவில் இருப்பதாக  குற்றம் சாட்டினார். மேலும் இது போல பல ஆண்களுடன் பழகி அவர் பணம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். லிவ் இன் உறவில் இருக்கும் ராகவேஷின் தந்தை மிகுந்த அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றும் , அவர் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட , தனது மகனுக்கும் மனைவிக்கும் நெருக்கமான உறவு இருப்பதை அறிந்து ஈஸ்வரிடம் அவர்களை பிரிக்க உதவி கேட்டதாக தெரிவித்த ஈஸ்வர், தான் மறுத்துவிட்டதால் வேறு வழி இல்லை ஜெயஸ்ரீயை கொல்லவும் தயங்கமாட்டேன் என கோவமாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்னை குற்றம் சாட்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் , முன்கூட்டியே காவல் ஆணையரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jayashree Rao (@jayashree.rethva)

இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ள ஜெயஸ்ரீ, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதனை திசை திருப்பவே ஈஸ்வர் இவ்வாறு செய்கிறார். பெண்கள் மீது குற்றம் சுமத்த வேண்டுமானால் அவரை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசுவது வழக்கமாகிவிட்டது. நீதிமன்றத்தில் தீர்ப்பு எனக்கு சாதகமாக வரும் என்ற பயத்தில்தான் இப்படியான போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஈஸ்வர். அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கேள்விப்பட்டேன்..எனக்கான பணத்தை கொடுக்காமல் நழுவி விடலாம் என பார்க்கிறார். நிச்சயம் விட மாட்டேன்..என் சட்டப்போராட்டம் தொடரும் “என குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
CM Vijay - Trisha: விஜய் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்காத த்ரிஷா.. நன்றி தெரிவித்த தவெகவினர்!
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
கணவருடன் ஜோடியாக முதல்வர் விஜயை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
ரசிகன் டூ தனிச் செயலாளர்..என்னுடைய கடவுள்..விஜய்க்கு வாழ்த்து சொன்ன ரூட் ஜகதீஷ்
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா
நூறு சாமி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..நன்றி கூறி வீடியோ வெளியிட்ட சுவாசிகா

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
ஃபயர் விடுவாரா? சட்டப்பேரவை நேரலையில் CM விஜய் இன்று பதிலுரை - உதயநிதி, EPS-க்கு பதில் வருமா?
TN Govt: வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
வாகன ஃபேன்சி எண்ணிற்கான கட்டணம் உயர்வு - கட்டட அனுமதிக்கான கட்டணமும் எகிறப்போகுது..!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்கும்? சென்னை? - வானிலை அறிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
Embed widget