மேலும் அறிய

”ஈஸ்வருக்கு பயம்.. என் பணத்தைக் கொடுக்காம நழுவ முடியாது” - வலுக்கும் ஜெயஸ்ரீ-ஈஷ்வர் பஞ்சாயத்து

"விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதனை திசை திருப்பவே ஈஸ்வர் இவ்வாறு செய்கிறார்."

சின்னத்திரை நடிகர்களான ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவருக்குமான சண்டை மீண்டும் பொதுவெளியில் வலுக்க தொடங்கியுள்ளது.

கல்யாண பரிசு, கல்யாணம் முதல் காதல் வரை, ஆஃபீஸ், ராஜா ராணி மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்  ஈஸ்வர். இவர் சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை பூதகரமாக வெடித்தது.ஈஸ்வர் மகாலட்சுமி என்னும் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் தனது குழந்தை முன்பு தகாத முறையில் நடந்துக்கொள்வதாகவும் குற்றம் சாட்டினார் ஜெயஸ்ரீ.இதற்கு பதிலளித்த ஈஸ்வர் , ஜெயஸ்ரீ தன் மீது வீண் பழி சுமத்துவதாகவும் , பணம் கேட்டு மிரட்டுவதாகவும் பதிலுக்கு குற்றம் சாட்டினார்.  அதனை தொடர்ந்து ஈஸ்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் பின்னர் இவர்கள் இருவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பின் வெவ்வேறு தளங்களில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.


”ஈஸ்வருக்கு பயம்.. என் பணத்தைக் கொடுக்காம நழுவ முடியாது” - வலுக்கும் ஜெயஸ்ரீ-ஈஷ்வர் பஞ்சாயத்து

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து, தன்னை விட 6  வயது சிறிய ராகவேஷ் என்னும் மருத்துவருடன்  ஜெயஸ்ரீ Live - In உறவில் இருப்பதாக  குற்றம் சாட்டினார். மேலும் இது போல பல ஆண்களுடன் பழகி அவர் பணம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். லிவ் இன் உறவில் இருக்கும் ராகவேஷின் தந்தை மிகுந்த அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்றும் , அவர் ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளரும் கூட , தனது மகனுக்கும் மனைவிக்கும் நெருக்கமான உறவு இருப்பதை அறிந்து ஈஸ்வரிடம் அவர்களை பிரிக்க உதவி கேட்டதாக தெரிவித்த ஈஸ்வர், தான் மறுத்துவிட்டதால் வேறு வழி இல்லை ஜெயஸ்ரீயை கொல்லவும் தயங்கமாட்டேன் என கோவமாக தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்னை குற்றம் சாட்டிவிடக்கூடாது என்பதற்காகத்தான் , முன்கூட்டியே காவல் ஆணையரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jayashree Rao (@jayashree.rethva)

இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ள ஜெயஸ்ரீ, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் அதனை திசை திருப்பவே ஈஸ்வர் இவ்வாறு செய்கிறார். பெண்கள் மீது குற்றம் சுமத்த வேண்டுமானால் அவரை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசுவது வழக்கமாகிவிட்டது. நீதிமன்றத்தில் தீர்ப்பு எனக்கு சாதகமாக வரும் என்ற பயத்தில்தான் இப்படியான போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் ஈஸ்வர். அவர் வெளிநாடு செல்ல இருப்பதாக கேள்விப்பட்டேன்..எனக்கான பணத்தை கொடுக்காமல் நழுவி விடலாம் என பார்க்கிறார். நிச்சயம் விட மாட்டேன்..என் சட்டப்போராட்டம் தொடரும் “என குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
Anbe Diana Review : அன்பே டயானா திரைப்பட விமர்சனம்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. எனக்கு நவ்யா நாயர்.. நடிகர் தியான் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!
Jason Sanjay: விஜய் இடத்தை பிடிக்க பிளான்?.. ஜேசன் சஞ்சயின் மாஸ்டர் பிளான்.. ரசிகர்கள் ஆச்சர்யம்!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget