![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vishnukanth - Samyuktha : அண்ணன் என நினைத்தேன்.. கேவலமாக ரெகார்ட் செய்துள்ளார்.. சம்யுக்தா ரகசியத்தை சொன்ன இயக்குநர் இவரா?
சீரியல் நடிகை சம்யுக்தா பற்றின ரகசியங்களை உடைத்த ஆடியோவை ரிலீஸ் செய்த விஷ்ணுகாந்த்.
![Vishnukanth - Samyuktha : அண்ணன் என நினைத்தேன்.. கேவலமாக ரெகார்ட் செய்துள்ளார்.. சம்யுக்தா ரகசியத்தை சொன்ன இயக்குநர் இவரா? Samyuktha audio has been leaked by Vishnukanth and the same has been recorded by vijay tv director Vishnukanth - Samyuktha : அண்ணன் என நினைத்தேன்.. கேவலமாக ரெகார்ட் செய்துள்ளார்.. சம்யுக்தா ரகசியத்தை சொன்ன இயக்குநர் இவரா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/a715576860c1c7da2daa7a60a8ab0e101685193204456224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னத்திரை சீரியல் பிரபலங்கள் ரீல் ஜோடியாக நடித்த பிறகு காதல் வயப்பட்டு ரியல் ஜோடிகளாக மாறுவது என்பது காலம் காலமாக நடைபெற்று வருவது தான். அதில் ஒரு சில ஜோடிகள் மட்டுமே கடைசி வரை அந்த உறவில் நிலைக்கிறார்கள். பெரும்பாலானோர் சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள் எனப் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணுகாந்த் - சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாக இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி வந்தனர். அவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனை பூதாகாரம் எடுத்து இணையத்தில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது.
விஷ்ணுகாந்த் சில தினங்களுக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் பேசிய போது 'சம்யுக்தாவின் ஆடியோ ஒன்றை லீக் செய்து இருந்தார். அவர் பேசுகையில் சம்யுக்தா தப்பான பாதையில் செல்கிறார். அவர் பற்றின முழு விஷயத்தையும் நான் வெளியில் சொல்லவில்லை, அதை சொல்லவும் முடியாது" என கூறியிருந்தார். என்னை காதலிக்கும் போது வேறு ஒரு நபருடன் பேசி கொண்டு இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அதற்கான ஆதாரமாக ஆடியோவை லீக் செய்துள்ளார் விஷ்ணுகாந்த். ’சம்யுக்தா வேறு ஒரு நபரிடம் பேசியதை அந்த நபர் ரெகார்ட் செய்து விஷ்ணுகாந்திற்கு அனுப்பியுள்ளார்’ என கூறியுள்ளார். இந்த ஆடியோ சோசியல் மீடியாவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஆடியோவில் சம்யுக்தா தன்னை பற்றின சில ரகசியங்களை வேறு ஒரு நபரிடம் போன் மூலம் கூறியுள்ளார். அந்த ஆடியோவில் சம்யுக்தாவுடன் பேசிய நபரை அண்ணன் என அழைத்துள்ளார். அந்த ஆடியோவில் சம்யுக்தா விஷ்ணுகாந்த்தை காதலிக்கும் போது 'நிறைமாத நிலவே' என்ற சீரிஸில் தன்னுடைய ஜோடியாக நடித்த ஆர்.ஜே ரவியோடு பேசி வந்துள்ளார். ரவியை சம்யுக்தா காதலித்ததாகவும் ஆனால் ரவி அவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும், அந்த அண்ணன் என்பவரிடம் கூறியுள்ளார்.
அண்ணன் என சம்யுக்தா நினைத்து ரவி பற்றியும் அவரின் தவறான நடத்தை பற்றியும் கூறியிருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் இயக்குநரான டைரக்டர் ஹரிஷிடம். அண்ணன் என நினைத்து அவரிடம் பகிர்ந்தால் அவர் கேவலமாக இதை ரெக்கார்ட் செய்து விஷ்ணுகாந்திடம் கொடுக்க அவர் மீடியாவில் இதை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிட்டார் என கூறியுள்ளார் சம்யுக்தா.
இணையத்தில் மிகவும் வைரலாக பரவும் இந்த செய்தி குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒருவரை நம்பி உண்மையை கூறும் போது அவர் அதை ரெக்கார்ட் செய்து வைப்பது எவ்வளவு கேவலமான செயல் என ஒரு தரப்பினர் சொல்ல வேறு சிலரோ அதை அவர் அப்படி செய்ததால் தானே உண்மை வெளியில் வந்தது என்றும் ஆளாளுக்கு தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)