மேலும் அறிய

Vijayashanti: கல்யாணமாகி 36 வருஷம் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்? விஜயசாந்தி கூறிய எதிர்பாராத ஷாக் தகவல்!

கல்யாணமாகி சுமார் 36 வருடங்கள் ஆகியும், ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்ற காரணத்தை விஜயசாந்தி கடந்த சில வருடங்களுக்கு முன் கூறினார்.

விஜயசாந்தி:

தமிழ் சினிமாவில் இப்போது நடிகை நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன் என்று பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு முன்னோடியாக தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை விஜயசாந்தி. இவரை ஆக்‌ஷன் ஹீரோயின் என்று கூட கூறலாம். அதனால் தான் நயன்தாராவுக்கு முன்பே கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார், லேடி அமிதாப் என்றெல்லாம் அழைக்கப்பட்டார். 

ரஜினிகாந்த் பட ஹீரோயின்:

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள விஜயசாந்தி, அப்போதே தேசிய விருது பெற்ற நடிகை என்ற சாதனையை படைத்தார். தமிழில் மன்னன் இவருக்கு பேரும் புகழும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு நிகராக தன்னுடைய நடிப்பை தில்லாக வெளிப்படுத்தி இருப்பார். ரஜினிகாந்தை கன்னத்தில் அறை விட்ட காட்சிகள் எல்லாம், ரஜினி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் எதிர்ப்புகள் இன்றி ரசித்தனர். அதே போல் ரஜினிகாந்த் 3 முறை விஜயசாந்தி கன்னத்தில் அறைந்திருப்பார் இந்த காட்சிக்கு தியேட்டரே கை தட்டல்களால் குலுங்கியது என கூறப்படுகிறது.


Vijayashanti: கல்யாணமாகி 36 வருஷம் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்? விஜயசாந்தி கூறிய எதிர்பாராத ஷாக் தகவல்!

ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை:

இதே போன்று சரத்குமார், கமல் ஹாசன், சிரஞ்சிவி ஆகிய நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அன்றைய காலகட்டத்திலேயே ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய நடிகையாக அறியப்பட்டார். சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் சேர்ந்தார். 2009 ஆம் ஆண்டு எம்பியாகவும் ஆனார்.

விஜயசாந்தியின் அரசியல் வாழ்க்கை:

2014 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். அரசியலில் இருந்து கொண்டே சினிமாவிலும் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளை போன்று இல்லாமல் உச்சத்திலிருக்கும் போது 1988 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி தற்போது இவருக்கு சுமார் 36 ஆண்டுகள் இவர் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.


Vijayashanti: கல்யாணமாகி 36 வருஷம் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்? விஜயசாந்தி கூறிய எதிர்பாராத ஷாக் தகவல்!

குழந்தை பெற்றுக்கொள்ளாததன் காரணம்:

இது குறித்து விஜயசாந்தி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருந்தார். அந்த தகவல் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. "அதில் அவர்....எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், குழந்தைகள் இருந்தால் குடும்பம், சுயநலம் என்று வந்துவிடும். அப்படி சுயநலமாக இருந்துவிட்டால் அரசியலில் ஈடுபட முடியாது. இதையெல்லாம் நான் நினைத்து என்னோட கணவரிடம் குழந்தைகள் வேண்டாம் என்று கூறினேன். அவரும் என்னை புரிந்து கொண்டார். அதனால், நாங்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை. இவ்வளவு ஏன் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட குடும்பம், குழந்தைகள் இல்லாமல் வாழ்ந்தவர்கள் தானே. எந்தவித சுயநலமும் இல்லாமல் மக்களுக்காக சேவை செய்தார்கள் அல்லவா. அவரைப் போன்று மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தான் குழந்தைகள் பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். 

இளம் தம்பதிகளுக்கு அட்வைஸ்:

இவர் கூறிய இந்த தகவல் தான் ரசிகர்களை அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது . சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட சுயநலமாக யோசிக்கும் மனிதர்கள் மத்தியில், மக்களுக்காக குழந்தையே வேண்டாம் என விஜயசாந்தி முடிவு செய்ததாக கூறியது யாருமே எதிர்பாராத ஒரு முடிவு என்று கூறலாம். மேலும், இப்போதெல்லாம் சினிமாவில் விவாகரத்து அதிகரித்து வருகிறது. ஈகோவை விட்டு விட்டு கணவன் மனைவிக்கிடையில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். கணவர் கோபமாக இருந்தால் மனைவி அமைதியாகவும், மனைவி கோபமாக இருந்தால் கணவர் அமைதியாகவும் இருந்துவிட வேண்டும் என குடும்பத்திற்கு தேவையான சில அட்வைசும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - DMDK Alliance.?: தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
தவெக உடன் கூட்டணி; தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியது என்ன.? ஏற்பாரா விஜய்.?
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
காப்பகங்களில் இனி பயமில்லை; அரசு எடுத்த நல்ல முடிவு - அமைச்சர் சொன்ன நற்செய்தி
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
RCB Ban: ஆர்சிபிக்கு இனி தடையா? 11 உயிர்கள் பறிபோனதற்கு தண்டனை? உண்மை இதுதான்
Watch Video: அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
அட.. நம்ம செனாய் நகர் பூங்காவா இது.!! வேற லெவல்ல மாறிடுச்சு பாருங்க - CMRL வெளியிட்ட வீடியோ
Trump Vs LA Protest: கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரியலூர், பெரம்பலூர் இளைஞர்களே! வரும் 28ம் தேதி உங்களுக்காக நடத்துறாங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Nayanthara: 3-ஆம் ஆண்டு திருமண நாள்... காதல் மழை பொழியும் நயன்தாராவின் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
Embed widget