![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
VJ Mahalakshmi: மகாலட்சுமி பணத்துக்காக கல்யாணம் பண்ணாங்களா..உண்மையை சொன்ன ரவீந்தர்
திருப்பதியில் நடந்த இந்த திருமணம் காதல் திருமணம் ஆகும். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்து வந்ததாகவும், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
![VJ Mahalakshmi: மகாலட்சுமி பணத்துக்காக கல்யாணம் பண்ணாங்களா..உண்மையை சொன்ன ரவீந்தர் Producer Ravindar chandrasekar revealed the secret of his marriage VJ Mahalakshmi: மகாலட்சுமி பணத்துக்காக கல்யாணம் பண்ணாங்களா..உண்மையை சொன்ன ரவீந்தர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/04/c3294cf267b0d1e9b54e01712efbdea51662286810410224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை மகாலட்சுமி பணத்துக்காக தன்னை திருமணம் செய்துக் கொண்டாரா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் பதிலளித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக இணையம் முழுவதும் ஒரு திருமணம் பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம் பெற்றிருந்தது. அது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி கல்யாணம் தான். சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தின் நன்கு பிரபலமானவர் மகாலட்சுமி. ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் மகாலட்சுமியின் சின்னத்திரை பயணத்தில் மிக முக்கியமானதாக அமைந்தது.
View this post on Instagram
தற்போது சன் டிவியில் அன்பே வா சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி, தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவிந்திரன் சந்திரசேகரை திருமணம் செய்துக் கொண்ட தகவலை பலராலும் கற்பனை செய்துக் கொள்ள கூட முடியவில்லை. அதிக பருமனாக இருக்கும் அவரை மகாலட்சுமி பணத்துக்காக திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. பலரும் 90 கிட்ஸ்கள் சாபம் சும்மா விடாது என சகட்டுமேனிக்கு ரவீந்தரை திட்டி தீர்த்தனர்.
திருப்பதியில் நடந்த இந்த திருமணம் காதல் திருமணம் ஆகும். கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகளாக காதல் இருந்து வந்ததாகவும், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருமண போட்டோக்களை பதிவிட்டு ரவீந்தர்,மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க..,ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...என பதிவிட்டார். இதேபோல் மகாலட்சுமி என் வாழ்க்கையில் நீ கிடைத்ததால் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உன் அன்பினால் என் வாழ்க்கையை நிரப்புகிறாய். லவ் யூ அம்மு என தெரிவித்திருந்தார்.
View this post on Instagram
இந்நிலையில் பிரபல ஆன்லைன் ஊடகம் ஒன்றிற்கு ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி பேட்டியளித்துள்ளது. அதில் பேசியுள்ள ரவீந்தர், மகாலட்சுமி பணத்துக்காக கல்யாணம் பண்ணதா சொல்றீங்க..பணத்துக்காக பண்ணிருந்தாங்கன்னா என்னை விட எத்தனை பேரு நல்லா இருக்காங்களே. என்னை எதுக்கு பண்ணனும். என கேள்வியெழுப்பியுள்ளார். இது முழுக்க முழுக்க நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் தான். நான் கூட எடையை குறைச்சிட்டு வாரேன்னு சொன்னேன். ஆனால் அதெல்லாம் தேவையில்லைன்னு சொல்லிட்டாங்க என ரவீந்தர் தெரிவித்துள்ளார்.
மகாலட்சுமி பேசும் போது, தான் திருமணத்திற்கு முதல் நாள் வரை ஷூட்டிங்கில் இருந்ததாகவும், மறுநாள் திருமண போட்டோ பார்த்து தான் அனைவரும் ஆச்சரியப்பட்டு விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)