மேலும் அறிய

7 வயது மகள் எழுதிய ஒருவரிக் கதையை படமாக்கும் நடிகர் பிரித்திவிராஜ்

பிரபல ஊடகம் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அலங்ரிதா என்ற ஏழு வயது மகள் உள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் பிரித்திவிராஜ். இவர், தமிழில் சில படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவிலும் இவருக்கு நிறைய ஆடியன்ஸ் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய இயக்குநர் கனவை சில வருடங்களுக்கு முன்பு கையில் எடுத்தார். நடிகர் மோகன்லாலை ஹீரோவாக நடிக்க வைத்து 'லூசிபர்' படத்தை இயக்கினார். பக்கா கமர்ஷியல் படமான இது மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்தது. மேலும், அதிக வசூலையும் இப்படம் ஈட்டியது. இப்படத்தில் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓப்ராய் என பல பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடித்தனர். 

 

7 வயது மகள் எழுதிய ஒருவரிக் கதையை படமாக்கும் நடிகர் பிரித்திவிராஜ்

இந்தப் படம் கொடுத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து படங்களை இயக்கும் எண்ணத்திற்கு வந்தார் பிரித்திவிராஜ். குறிப்பாக, 'லூசிபர் 2' உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவர் மலையாளத்தில் நடித்த 'அய்யப்பனும் கோஷியும்' பெரிய ஹிட்டடித்தது. மேலும், இதை தமிழில் ரீமேக் செய்ய முயற்சியும் நடந்து வருகிறது. தெலுங்கு 'அய்யப்பனும் கோஷியும்' ரீமேக்கில் ராணா மற்றும் ராம் சரண் நடித்து வருகின்றனர். 

தற்போது பிரித்திவிராஜ் அடுத்து தான் இயக்க போகும் படம் குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். தான் இயக்கப் போகும் படத்துகான கதை தன்னுடைய மகளின் குறிப்பிலிருந்து கிடைத்தாகவும் பிரித்திவிராஜ் கூறியிருக்கிறார். பிரபல ஊடகம் ஒன்றில் செய்தியாளராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் பிரித்திவிராஜ். இவர்களுக்கு அலங்ரிதா என்ற ஏழு வயது மகள் உள்ளார். சமீபத்தில் மகள் எழுதிய குட்டி கதை ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.  ட்ராயிங் பேட் ஒன்றிலி பிரித்திவியின் மகள் அலங்ரிதா “ அமெரிக்காவில் வசிக்கும் அப்பா மற்றும் மகள் இருவரும் , இரண்டாம் போர் ஏற்படுவதன் காரணமாக , அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு சென்று விடுகின்றனர். பின்னர் போர் நின்ற பிறகு தன் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்” என எழுதியிருக்கிறார்.

 


7 வயது மகள் எழுதிய ஒருவரிக் கதையை படமாக்கும் நடிகர் பிரித்திவிராஜ்

இதனை பகிர்ந்த பிரித்திவி “ நான் கொரோனா ஊரடங்கு காலத்தில் கேட்ட நல்ல கதைகளில் சிறந்த கதை இதுதான், இதன் மூலம் நான் எனது அடுத்த கதையை தேர்வு செய்துவிட்டேன். ஆனால் இம்முறை திரைக்கு பின்னால் இருந்து, கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவேன் ”என குறிப்பிட்டுருந்தார். நடிக்க வருவதற்கு முன்னதாக இவர் உதவி இயக்குநராக பணியாற்றினார். 

மகளின் நாங்கு வரி கதையினை  தேர்வு செய்த பிரித்திவி ராஜ் படத்திற்கு “ப்ரோ டாடி “ என பெயரிடப்பட்டுள்ளது. மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகனாக மோகன்லான் நடிக்க உள்ளார். ஆஷிர்வாத் சினிமாசின்  ஆண்டனி பெரும்பவோர்  இந்த படத்தை தயாரிக்க உள்ளார். ஸ்ரீஜித் மற்றும் பபின் ஆகியோர் படத்திற்கான திரைக்கதையை எழுதியுள்ளனர்.மேலும் இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைக்கிறார். இது மட்டுமல்லாமல் படத்தின் ஆர்ட் பிரிவு தொட்டு மேக்கப் பிரிவு வரையிலான அனைவரையும் தேர்வு செய்துவிட்டார் பிரித்திவி. பிரித்திவியின் மகள் கொடுத்த  ஒன்லைனின் அடிப்படையில், போர் , அகதிகள் முகாம் என வருவதால், படம் சீரியஸ் டிராமாவாக உருவாகலாம் என  பேசப்பட்டது. ஆனால்   இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பொழுதுபோக்கு  கதைக்களத்துடன் உருவாக இருப்பதாக படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரித்திவி ராஜ் தெரிவித்திருப்பது. படத்தின் மீதான எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget