MAANAADU | ”யப்பா சாமி, நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா” - ட்வீட்டால் கடுப்பான இயக்குநர் வெங்கட் பிரபு !
இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே சம்பளம் விவகாரத்தால் பிரச்சனை ஏற்பட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நிறுத்தப்பட்டதாக சிலர் ட்விட்டரில் ஷேர் செய்து வந்தனர்

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளார். படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது சிம்பு விலை உயர்ந்த கைக்கடிகாரங்களை படக்குழுவினருக்கு பரிசளித்தார். படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இணையத்தில் உலா வந்தது. இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் இடையே சம்பளம் விவகாரத்தால் பிரச்சனை ஏற்பட்டு போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நிறுத்தப்பட்டதாக சிலர் ட்விட்டரில் ஷேர் செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இயக்குநர் வெங்கட் பிரபு அந்த ட்வீட்டை , ரீ-ட்வீட் செய்து “ யப்பா சாமி ,ஏன்? ஏன் ? ஏன் ? , தயவு செய்து வதந்திகளை பரப்பாதீங்க! மாநாடு படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் வேலை முழு வீச்சுல நடந்துட்டுதான் இருக்கு , நிம்மதியா வேலை செய்ய விடுங்கப்பா “ என காட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த ட்வீட்டை பகிர்ந்தவரும் , இயக்குநர் வெங்கட் பிரபுவும் அந்த பதிவை நீக்கிவிட , ”ட்வீட்டை நீக்கியதற்கு நன்றி ”என இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் ஒரு ட்வீட் செய்துள்ளார். முன்னதாக கொரோனா சூழல் காரணமாக இயக்குநர் வெங்கட் பிரபு, சிம்பு உள்ளிட்ட அதிக சம்பளம் வாங்கிய கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து 30 சதவிகிதம் குறைத்துக்கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோரிக்கை வைத்ததாகவும், ஆனால் அதனை சிலர் மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. குறிப்பாக, ஒப்பந்தம் செய்தது போல் தன்னுடைய முழு சம்பளத்தையும் வழங்கினால்தான், நான் இறுதிக்கட்ட படப்பிடிப்பினை தொடங்குவேன் என இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பாளரிடம் கூறிவிட்டார் எனவும் கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அப்படியான ஒரு தகவல் இணையத்தில் வலம் வர கடுப்பான இயக்குநர் வெங்கட் பிரபு , தயவு செய்து வதந்திகளை பரப்பாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளார்

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாநாடு திரைப்படம் என்றோ வெளியாகியிருக்க வேண்டிய திரைப்படம் .ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு முடங்கியதால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். வருகிற ஆயுத பூஜை அன்று திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















