![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nivetha Pethuraj: சென்னை மழையை ரசித்து பதிவு.. நடிகை நிவேதா பெத்துராஜை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!
Nivetha Pethuraj: சென்னை மழையைக் கொண்டாடி நடிகை நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த ட்வீட் இணையதளத்தில் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
![Nivetha Pethuraj: சென்னை மழையை ரசித்து பதிவு.. நடிகை நிவேதா பெத்துராஜை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்! people slam actress nivetha pethuraj for her tweet on chennai rain Nivetha Pethuraj: சென்னை மழையை ரசித்து பதிவு.. நடிகை நிவேதா பெத்துராஜை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/05/ae348e9f5b01e7b4c2211e71d09370511701775766286572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிக்ஜாம் புயல்
நேற்று முன் தினம் சென்னையை நெருங்கத் தொடங்கிய மிக்ஜாம் புயல் முந்தைய நாள் நள்ளிரவில் இருந்து தன் ஆக்ரோஷத்தை காட்டத் தொடங்கியது. சென்னைக்கு 100 கி.மீ. தூரத்தில் இருந்த போது தொடங்கிய கனமழை மற்றும் சூறைக்காற்று நேற்றிரவு வரை தொடர்ந்தது. இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்து தனித்தீவாக காட்சியளிக்கிறது.
மழை வெள்ளத்திற்கு இதுவரை 8 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்தச் சூழலில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவடடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களுடன் நின்ற பிரபலங்கள்
இப்படியான நிலையில் இந்த மிக்ஜாம் புயலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படியும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணங்களை ஒரு சில பிரபலங்கள் முன்வந்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு சில பிரபலங்களில் பதிவு பாதிப்பிற்குள்ளான மக்களை சீண்டும் வகையில் அமைந்துள்ளது.
மழையைக் கொண்டாடிய நிவேதா பெத்துராஜ்
சென்னை முழுக்க பலத்த காற்றும் மழையும் அடித்துக் கொண்டிருந்த சூழலில் பல்வேறு மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் நீர் சூழந்து முடங்கி கிடந்த வேளையில், நடிகை நிவேதா பெத்துராஜ் (Nivetha Pethuraj) தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில் “மழை பெய்யும்போது சென்னை உலகத்தில் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் சிறந்தது” என்கிற வகையில் கூறியிருந்தார்.
Chennai when it rains >>>>>>>>>>> World
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) December 3, 2023
கடுப்பான மக்கள்
இந்தப் பதிவை பார்த்து கடுப்பான மக்கள் “ஊரே தண்ணிரில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது நீங்கள் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு மழையை ரசித்துக் கொண்டிருங்கள்” என்று அவரை விமர்சித்து பதிவிட்டுள்ளார்கள். மேலும் ஆஸ்கர் வென்ற பாரசைட் படத்தில் ஒரு காட்சியையும் மேற்கோள் காட்டி அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பாரசைட் படத்தின் காட்சி
ஹாலிவுட்டின் சில ஆண்டுகளுக்கு முன் ஆஸ்கர் வென்றத் திரைப்படம் பாரசைட். வர்க்க பேதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் ஒரு பக்கம் முதலாளி நேற்று பெய்த மழையால் இன்று காற்றில் மாசு குறைந்திருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்க, அவரது கார் டிரைவரின் வீடு அதே மழையில் மூழ்கி இருக்க இடமில்லாமல் அவரது குடும்பம் நடுத் தெருவில் நின்றிருக்கும். இந்த படத்தின் இந்தக் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நிவேதா பெத்துராஜின் பதிவிற்கு இந்தக் காட்சியை பதிலாக தற்போது அனுப்பி வருகிறார்கள் மக்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)