மேலும் அறிய

நான் என்ன பண்ணுனேன்; அவதூறு பரப்பினால் சும்மா இருக்க மாட்டேன்.. - பார்வதி நாயர் எச்சரிக்கை

என்னைப் பற்றி கடந்த நில நாட்களாக ஊடகங்களில் அவதூறு பரப்பப்படுகின்றன . அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

என்னைப் பற்றி கடந்த நில நாட்களாக ஊடகங்களில் அவதூறு பரப்பப்படுகின்றன . அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

எனது உடைமைகள் காணாமல் போனது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் நான் புகார் கொடுத்துள்ளேன். சுபாஷ் சந்திர போஸ் என்ற நபர் மீது நான் புகார் கொடுத்திருந்தேன். அவர் என் வீட்டில் எனது செல்லப் பிராணிகளை பராமரிக்கும் பணியில் இருந்தார். அவர் மீது எனக்கு சந்தேகம் இருந்ததாலேயே அவரை போலீஸ் புகாரில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவரை நான் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதாக அவதூறாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. எனக்கு அந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. நான் சட்டத்தை நம்புகிறேன். அதன்படியே நடக்கிறேன். 

அதேபோல் எனது மேக்கப் ஆர்டிஸ்டாக இருந்த செல்டன் ஜார்ஜ் என்பவரும் என்னைப் பற்றி ஊடகங்களில் அவதூறாகப் பேசியுள்ளார். அவர் பேச்சில் துளியும் உண்மையில்லை. என்னை அவமானப்படுத்தி அதன் மூலம் பெயர் பெற விரும்புகிறார்.

அவர்கள் பேச்சின் அடிப்படையில் என்னைப் பற்றி அவதூறு செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பார்வதி வீட்டில் திருட்டு..

நடிகை பார்வதி நாயர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின்  புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் ‌அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது என்றும், இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என ஏற்கெனவே பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அவரே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பார்வதி நாயர் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget