மேலும் அறிய

Parthiban: என்னை கருப்பு கமல்ஹாசன்னு சொல்வார்கள்.. நெகிழ்ந்த இயக்குநர் பார்த்திபன்

Parthiban : கமல் அல்லது ரஜினி யார் ஸ்பெஷல்? கமலுடன் அரசியலில் இறங்கும் நோக்கம் பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் பார்த்திபன்.

தமிழ் சினிமாவை வேறு ஒரு தொலைநோக்கு பார்வையுடன் அணுகும் வெகு சில இயக்குநர்களில் ஒருவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கும் பார்த்திபன். அவரின் படைப்புகள் மூலம் புதிய பல முயற்சிகளை எடுத்து அனைவரையும் திகைக்க வைக்க கூடுயவர். அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் வழக்கமான தன்னுடைய சுவாரஸ்யமான உரையாடலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பற்றி பேசி இருந்தார். 

 

Parthiban: என்னை கருப்பு கமல்ஹாசன்னு சொல்வார்கள்.. நெகிழ்ந்த இயக்குநர் பார்த்திபன்

"தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர்களான கமல்ஹாசன் ரஜினிகாந்த் இருவருடன் நட்பு ரீதியாக நல்ல ஒரு பிணைப்பு இருக்கிறது. கமல் சார் எனக்கு எப்படி என்றால் அவருக்கு சிவாஜி கணேசன் எப்படியோ அப்படி. சிவாஜி சாரை எப்படி அவர் ஆதர்ஷ குருவாக எடுத்துக்கொண்டாரோ அதே போல தான் கமல் சார் மீது எனக்கு இருக்கும் நேரடியான பார்வை. எனக்கு மட்டுமல்ல ரஜினி சாருக்கு கூட கமல் சார் தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் மேடையில் ஒருமுறை பேசும் போது கமல் இருக்கும் இந்த திரையுலகில் என்னை மாதிரி ஒருத்தன் சூப்பர்ஸ்டார் ஆவது எவ்வளவு பெரிய விஷயம் என கூறியிருந்தார். அந்த அளவுக்கு  அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் கமல் சார். 


உண்மையில் சொல்ல போனால் நானும் ரஜினி சாரும் அடிக்கடி பேசிக்கொள்வோம். ஆனால் அது போல நான் கமல் சாருடன் நான் செய்ததே இல்லை. அவரை போலவே நானும் சினிமாவில் பல புதிய முயற்சிகளை செய்வதாலேயே என்னை கொஞ்ச நாள் கருப்பு கமல்ஹாசன் என்றெல்லாம் அழைத்துள்ளார்கள். எனக்கு இரண்டு பேரும் ஒன்று தான். 

குறிப்பாக கமல் சாரின் அரசியல் பார்வை, அவரின் பின்புலம் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் அதில் அவர் இறங்கி செய்ய வேண்டும் என்ற தைரியமும் துணிச்சலும் மற்றவர்களிடம் பார்ப்பது மிகவும் குறைவு. அதற்காக அவரை நான் பாராட்டுவேன். 

 

Parthiban: என்னை கருப்பு கமல்ஹாசன்னு சொல்வார்கள்.. நெகிழ்ந்த இயக்குநர் பார்த்திபன்

அவருடன் அரசியல் பயணத்தில் எதிர்காலத்தில் நான் இணைவேனா என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. அரசியல் மீது எனக்கு ஒரு ஸ்பெஷல் பார்வை இருக்கிறது. என்னுடைய எல்லா படங்களிலும் அரசியல் இருக்கும். நான் ஒரு மனிதநேயம் உள்ளவன் அதனால் என்னால் முடிந்த விஷயங்களை நான் செய்து வருகிறேன். பிற்காலத்தில் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் எல்லாம் நான் இதை செய்யவில்லை. 

சினிமாவுக்கு நான் வருவதற்கு முன்னர் பல நாட்கள் கஷ்டப்பட்டேன். புதிய பாதை படத்திற்கு பிறகு தான் எனக்கு என வீடு, கார் இந்த வசதி வாய்ப்பெல்லாம் வந்தது. இது அனைத்தையும் எனக்கு கொடுத்தது இந்த சமூகம் தான் என்பது என்னுடைய நம்பிக்கை. இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன். நிச்சயம் சமூகத்தை நோக்கி என்னுடைய பார்வை இருக்கும். அது அரசியலா அல்லது கமல் சாரா என்பது இப்போதைக்கு தெரியாது" என்றார் பார்த்திபன்.  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget