மேலும் அறிய

''கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்

போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பேனோ என்னவோ தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று பெருமிதத்துடன் நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பொன்னியின் செல்வன் பாகம்-1’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. கதைக்களமாக இடம் பெற்றுள்ள தஞ்சையில் திரையரங்குகளை ரசிகர்கள் திருவிழா போன்று அலங்கரித்து வெடி, வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடினர்.எழுத்தாளர் கல்கி எழுதிய மிகவும் புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்-1 படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


'கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்

படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பிரமாண்ட பொருட்செலவில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன்-1 இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

படத்தின் முதல் காட்சி இன்று காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. தஞ்சை திரையரங்குகளில் அதிகாலை முதலே குவிந்த ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் இன்று ரசிகர்களுடன் அமர்ந்து ஆரவாரத்துடன் நடிகர் பார்த்திபன் பார்த்து ரசித்தார். பின்னர் அவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு நடிகர் பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

'கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம். ராஜராஜன் செய்த சாதனைகளை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும். பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த பொன்னியின் செல்வன் இருக்கும். இந்த பொன்னியின் செல்வனை நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும், ஒவ்வொரு இடத்திற்கு சென்று உள்ளார்கள். இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.


'கடந்த ஜென்மத்தில் சோழனாக பிறந்திருப்பேனோ'' - பெருமிதப்பட்ட நடிகர் பார்த்திபன்

ஆயிரத்தில் ஒருவனுக்குப் பிறகு இதுபோல் வாய்ப்பு அமைந்துள்ளது. போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் இரவின் நிழலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என கேட்கிறார்கள். அதுவே எனக்கு ஆஸ்கார் கிடைத்தது போல் இருப்பதாகவும். இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்தேன். இதுபோல் படங்கள் தொடர்ந்து செய்வதற்கு, பாராட்டுகளும் உந்துதல்களும்தான் காரணம்.

பொன்னியின் செல்வனுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் தமிழுக்கும் அந்த பெயர் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Embed widget