மேலும் அறிய

Pa Ranjith: “நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் படம் என்றாலே சென்சார் போர்டு நெருக்கடி தருகிறார்கள்” - பா.ரஞ்சித் ஆதங்கம்!

Pa Ranjith: ”பெரிய தலைவர் அவர். எங்களை படிக்க வைத்த அவரை எப்படி நீங்கள் ரவுடி என கூறலாம் எனக் கேள்வி வந்தது. எவ்வளவு பேசியும் சென்சார் அனுமதி தர முடியாது எனக் கூறி விட்டனர்” என்ற ரஞ்சித்.

Pa Ranjith: ஒரு புகைப்படம் இடம்பெற்றிருந்ததால் ப்ளூ ஸ்டார் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சென்சார் போர்டு பிர்ச்சனை செய்ததாக இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் கூறியுள்ளார்.

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் படம் கடந்த 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வெற்றி விழாவை படக்குழு கொண்டாடியது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற படத்தின் தயாரிப்பாளரான பா. ரஞ்சித் சென்சார் போர்டு குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “சினிமாவில் வெற்றி அவ்வளவு சாதாரணமாக கிடைக்காது. நாம் பேசற அரசியலையும், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதையும் வைத்து மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமது வேலையைப் பொறுத்து தான் அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். நீலம் புரொடெக்‌ஷன் படம் வருகிறது என்றாலே சென்சார் போர்டு பிரச்னை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளது. அந்த வகையில் இந்தப் படத்திலும் பிரச்சனை வந்தது. ப்ளூ ஸ்டார் படத்தை பார்த்த சென்சார் போர்டு படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றது. 

பூவை மூர்த்தியார் படம் உள்ளது. அவர் ரவுடி என கூறினர். பூவை மூர்த்தியார் எங்களை படிக்க வைத்தவர். பெரிய தலைவர் அவர். எங்களை படிக்க வைத்த அவரை எப்படி நீங்கள் ரவுடி என கூறலாம் என கேள்வி வந்தது. எவ்வளவு பேசியும் சென்சார் அனுமதி தர முடியாது என கூறி விட்டனர். பின்னர் ரிவைஸிங்கில் மீண்டும் விண்ணப்பித்தோம். அதில், படத்தில் கேரக்டர்களின் பெயர், டீம் பெயர் என பல மாற்றங்களை கொண்டு வர சென்சார் போர்டு வலியுறுத்தியது. ஒரு படம் ஒற்றுமையைக் கூறுகிறது. இங்கு இருக்கும் வேறுபாடுகளுக்கு எதிராக ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறும் படத்துக்கு தடை ஏற்படுத்தும் கருத்து உள்ளவர்கள் தான் சென்சார் போர்டில் உள்ளனர். 

இப்படிப்பட்ட சூழலில் தான் படம் ரிலீசாகி மக்களை சென்று சேர்ந்தது. உங்களுடன் முரண்படுவதற்கும் சண்டையிடுவதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை. ஒருவருக்கு ஒருவர் இருக்கும் வேறுபாடுகள் குறித்து பேச வேண்டும். மக்களுக்கு தெரிய வேண்டியதை அவர்களின் மொழியில் சொல்கிறோம்” எனப் பேசியுள்ளார். சென்சார் போர்டு குறிப்பிட்ட பூவை ஜெகன் மூர்த்தி என்பவர், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த அவர், சென்னை சட்டக் கல்லூரியில் படித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியதுடன், சென்னை ரிசர்வ் வங்கியில் உயர் பதவியில் இருந்து வந்தார். 

சிறுவயதில் அம்பேத்கரின் சமூக பணியால் ஈர்க்கப்பட்ட இவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வேலை வாய்ப்பு உதவிகள், வீட்டுமனை உதவிகள், தொழிலாளர் முன்னேற்றம், சுகாதார பணிகள், கட்சி முன்னேற்றம், சமூக போராட்டம் என தனது வாழ்நாளில் சிறுபான்மையினரின் முன்னேற்றத்திற்காக  போராடியுள்ளார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget