மேலும் அறிய

Jigarthanda Double X: ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” பார்ப்பதாக சொன்ன க்ளிண்ட் ஈஸ்ட்வுட் - மகிழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை விரைவில் பார்ப்பேன் என ஹாலிவுட் பிரபலம் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை விரைவில் பார்ப்பேன் என ஹாலிவுட் பிரபலம் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கொண்டாடப்படும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளி வெளியீடாக வெளியான இப்படத்தில் ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூரியா , நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன், சத்யன், இளவரசு, சஞ்சனா நடராஜன், நவீன் சந்திரா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ்  நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்த நிலையி திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்ச்டோன் பெஞ்சு புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. 

இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் 2ஆம் பாகமாகும். இந்த படத்தில் அல்லியன் சீசர் என்னும் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தார். மதுரையை அடக்கி ஆளும் ரவுடியாக அவருக்கு சினிமாவில் வரும் ஹாலிவுட் பிரபலமான க்ளின்ட் ஈஸ்ட்வுட் தான் ரோல் மாடல். அவர் செய்யும் சம்பவங்களும் ஈஸ்ட்வுட் படங்களை பார்த்தே அதில் வருவது போலவே இருக்கும். மேலும் அதில் காட்டப்படும் பிளாஸ்பேக் காட்சிகளில் கூட ஈஸ்ட்வுட் தான் ராகவா லாரன்ஸூக்கு அல்லியன் சீசர் என்ற பெயரை வைத்ததாகவும் காட்டப்பட்டிருக்கும். 

இப்படியான நிலையில் தமிழ் படத்தில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் பற்றி காட்டப்பட்டிருந்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவரை பற்றி தெரியாதவர்கள் கூட யார் அவர் என இணையத்தில் தேடினர். 93 வயதான க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர். தற்போது கூட ஜூரி 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். சினிமாவில் நாம் பார்க்கும் கௌபாய் வேடங்களுக்கு விதை போட்டவர்களில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் ஒருவர். 

இதனிடையே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படம் ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்து விட்டது. மேலும் இப்படத்தின் 3வது பாகம் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஜிகர்தண்டா படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இணையவாசி ஒருவர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் எக்ஸ் வலைத்தள கணக்கை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “இந்தியர்களாகிய நாங்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். அது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இந்த படம் முழுக்க நாங்கள் உங்களுக்கு சிறந்த மரியாதை அளித்துள்ளோம். சில அனிமேஷன் காட்சிகளை நீங்கள் இளம் வயதில் இருப்பது போல நாங்கள் உருவாக்கியுள்ளோம். நேரம் கிடைத்தவுடன் அதைப் பாருங்கள்” என தெரிவித்திருந்தார். 

இதற்கு பதில் கொடுத்துள்ள க்ளிண்ட் ஈஸ்ட்வுட், ”வணக்கம். நான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பற்றி அறிந்திருக்கிறேன். என்னுடைய ஜூரி 2 படம் முடித்தவுடன் அதை பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார். இதனை குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை கார்த்திக் சுப்பராஜ் வெளிப்படுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "லெஜண்ட் கிளின்ட் ஈஸ்ட்வுட் ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் பற்றி அறிந்திருக்கிறார் என்பது ஒரு கனவு போல உள்ளது.  விரைவில் அப்படத்தை பார்க்கப்போகிறேன் என தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் சார்பாக  ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை அவருக்கு நான் இதயப்பூர்வமாக அர்ப்பணித்துள்ளேன்.  படத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். இந்த தருணத்தில் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
Embed widget