Nayanthara Birthday: தாயாக.. தாரமாக.. முழுமை அடைந்துவிட்டாய் கண்மணி.. நயனின் பிறந்தநாளில் நெகிழ்ந்த விக்னேஷ்சிவன்!
நடிகை நயன்தாராவின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் மனைவி நயன்தாராவுக்கு நெகிழ்ச்சிமிக்க பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்

திருமணமான பின் முதல் பிறந்தநாளை நடிகை நயன்தாரா(Nayanthara) இன்று கொண்டாடுகிறார். நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், மனைவி நயன்தாராவுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் நயனும் விக்கியும் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சிமிக்க பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் உன்னுடன் இருக்கும் ஒன்பதாவது பிறந்தநாள் இது. உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு பிறந்த நாளும் மிகவும் ஸ்பெஷலானது, நினைவிற்குரியது மட்டுமல்ல வித்தியாசமானதும் கூட. ஆனால் இந்த பிறந்தநாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் இது நாம் இருவரும் கணவன் மனைவியாக, இரண்டு அழகான குழந்தைகளுக்கு அம்மா அப்பாவாகவும், நமது வாழ்க்கையை தொடங்கிய பின்வரும் முதல் பிறந்தநாள்! மேலும் உன்னை நான் எனக்கு ஒரு வலிமைமிக்க நபராக பார்க்கிறேன்; அப்படித்தான் உன்னை எனக்கு தெரியும். உன்னுடைய வலிமை மற்றும் மன உறுதி மற்றும் செய்கின்ற வேலைகளில் உன்னுடைய அர்ப்பணிப்பு. இந்த பல வருடங்களில் நான் உன்னை வித்தியாசமான ஒரு பெண்ணாக பார்க்கிறேன்.
மேலும் வாழ்க்கை மற்றும் அனைத்தின் மீதும் உன்னுடைய நேர்மையையைப் பார்த்து நான் வியக்கிறேன். ஆனால் இன்று உன்னை நான் ஒரு தாயாக பார்க்கையில், இதுவரை நீ அடைந்த உயரங்களில் இதுவே மிகவும் முழுமையான மற்றும் மகிழ்ச்சியான தருணமாக பார்க்கிறேன்.
நீ தற்போது முழுமை அடைந்து விட்டாய்…. நீ மிகவும் சந்தோஷமாக காணப்படுகிறாய்! நீ மிக அழகாகவும் காணப்படுகிறாய். குழந்தைகள் உன் முகத்தில் முத்தமிடுவதால் நீ இப்போதெல்லாம் மேக்கப் அணிவதில்லை. இவ்வளவு அழகை இத்தனை வருடங்களாக நான் பார்த்ததில்லை. என்றும் மாறாத சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியும் உன்னுடைய முகத்தில் எப்போதும் இருக்கட்டும். இதற்காக நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.
View this post on Instagram
என் வாழ்க்கை நிறைவடைந்ததாக நான் உணர்கிறேன். வாழ்க்கை மிகவும் அழகாகவும், நிறைவாகவும் காணப்படுகிறது.நமது குழந்தைகளுடன் நாம் இதே போல் சந்தோஷமாக இருக்க நான் வாழ்த்துகிறேன். நாம் அனைவரும் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள கற்றுக் கொண்டுள்ளோம். கடவுளின் அருளோடும், பிரபஞ்சத்தின் அறிவோடும், ஒரு அழகான வாழ்க்கையை நாம் உருவாக்குவோம்! என்றென்றும் உன்னை காதலிக்கிறேன்.
நடிகை நயன்தாராவை அன்பு மனைவி மற்றும் தங்கமே என்று குறிப்பிட்டும். மேலும் தங்களின் குழந்தைகளை உயிர், உலகம் எனக் குறிப்பிட்டு அனைவரையும் என்றென்றும் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எனது லேடி மற்றும் சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை அவர் குறிப்பிட்டுள்ளார்.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















