மேலும் அறிய

HBD Mari Selvaraj: மாரி செல்வராஜ் பிறந்தநாள்.. சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு

HBD Mari Selvaraj: எது காலத்துக்கும் மானுட சமூகத்துக்கு அவசியமோ, எது காலத்துக்கும் இந்த சமூகம் பெற வேண்டுமோ அதை நோக்கியே மாரி செல்வராஜின் படங்கள் இருப்பதை காணலாம். 

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். 

கவனிக்க வைத்த கலை 

இயக்குநர் மாரி செல்வராஜ், கற்றது தமிழ் படத்தில் இருந்தே இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்படத்தில் ஒரு காட்சியிலும் நடித்திருப்பார். இப்படியான அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “நான் சென்னை வந்தவுடன் இயக்குநர் ராமிடம் என்னை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைத்தேன்” என தெரிவித்திருந்தார். அதேபோல் இயக்குநர் பா.ரஞ்சித்தையும் குறிப்பிட்டு பேசியிருந்தார். 

அந்த அளவுக்கு இந்த இரண்டு நபர்களும் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். மேலும், மேலும் எனக்கு எல்லா வாய்ப்பு இருந்தும் கலைதான் முக்கிய ஆயுதம் என்ற உறுதியோடு நான் இருக்க காரணம் விசிக தலைவர் திருமாவளவன் தான். எது காலத்துக்கும் மானுட சமூகத்துக்கு அவசியமோ, எது காலத்துக்கும் இந்த சமூகம் பெற வேண்டுமோ அதை நோக்கியே மாரி செல்வராஜின் படங்கள் இருப்பதை காணலாம். 

சிந்திக்க வைத்த படங்கள் 

2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் பிஏபிஎல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய கொடுமைகளையும், அத்தனையும் தாண்டி படித்து சாதிக்க நினைக்கும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் முயற்சியாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் பல காட்சிகள் மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்தது.இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேசமயம் சாதிய படம் எடுக்கிறார் என்ற அழுத்தமான முத்திரையை அவர் மீது குத்தியது. 

இதனைத் தொடர்ந்து கர்ணன் என்ற படத்தை தனுஷை வைத்து இயக்கினார். இப்படமும் தென்மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமுகத்தில் அனைவரையும் சமமாக பார்க்க சொல்லும் மனிதர்கள் மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறையை உறைய வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியிருந்தார். 

3வது படமாக அமைச்சர் உதயநிதியை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். இந்த படம் மேற்கு மாவட்ட அரசியலை வைத்து எடுக்கப்பட்டது. இந்த 3 படங்களும் மாரி செல்வராஜின் கைவண்ணமாக அமைந்தது. தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை தெளிவாக சொன்னார். அதனாலேயே கொண்டாடும் மனிதராக மாரி செல்வராஜ் மாறியிருக்கிறார். 

ஜெயித்த மாரி செல்வராஜ் 

மாரி செல்வராஜ் சாதி படங்களை எடுக்கிறார் என்றால் படம் பார்ப்பவர்களுக்கு அது உண்மையில் கோபத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்துகிறது. நமக்கே தெரியாமல், நம்மையே அறியாமல் இதுபோன்ற முன்னேற நினைக்கும் மக்கள் மீது நாம் காட்டும் பாரபட்சம் எப்பேர்ப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதை புரியும்போது தான் சொல்ல வந்த விஷயத்தில் மாரி செல்வராஜ் ஜெயித்து விடுகிறார். 

அடுத்தடுத்த படங்கள் 

இந்நிலையில் மாரி செல்வராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இயக்கியுள்ள வாழை படத்தின் அப்டேட் இன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். அதன்படி, வாழை படம் உலகம் பேசும்படமாக இருக்கும். எல்லா எல்லா பலமும் உனக்காக இருக்கும்” என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார். இதனால் வாழை படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget