மேலும் அறிய

சீனு ராமசாமி படத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மலையாள நடிகர் வினீத்!

இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் உள்ள பாடலை பாடுவதற்காக மலையாள நடிகர் வினீத் வெளிநாட்டில் இருந்து, சென்னை வந்து பாடல் பாடி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் சீனு ராமசாமி. ’கூடல் நகர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே  உள்ளிட்ட வெற்றிப்  படங்களை இதுவரை கொடுத்து உள்ளார்.
 
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள, மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தேதி தள்ளிப்போன வண்ணம் உள்ளன. இவரது இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம், ’இடிமுழக்கம்’. என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்த பாடம் தயாராகி வருகிறது.
 
இடிமுழக்கம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடலை ஒன்றை வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இவர் மலையாள திரையுலகில் நடிகர், பாடகர், இயக்குநர் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

சீனு ராமசாமி படத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மலையாள நடிகர் வினீத்!
 
இதுகுறித்து படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்து உள்ளார். 
அவர் கூறுகையில், ”வினித் பாடியுள்ள இந்தப் பாடல் படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது. அப்பாடல் காதல் மற்றும் நட்பைப் பற்றிப் பேசுகிறது. எங்களுக்கு ஒரு 'அன்பான' குரல் கொண்ட ஒரு பாடகர் தேவைப்பட்டார்.
 

 நீண்ட யோசனைக்குப் பிறகு, வினித் ஸ்ரீனிவாசன் அதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்பது எனக்குத் தோன்றியது. நான் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்து இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துவிட்டது. நான் அவரது குரலின் தீவிர ரசிகன் மற்றும் அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு இருக்கிறேன். நான் அவரது பெயரை ரகுநந்தனுக்கு பரிந்துரைத்தேன். 
 
அவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. நாங்கள் அவரை அணுகினோம். அவர் என் வேலையை விரும்புவதாக என்னிடம் சொன்னபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் பாடலைப் பதிவு செய்யச் சென்னைக்கு வந்தார்.
 
’பூமலரும் காலம் இது யார் அறிவார்’ என தொடங்கும்,  இந்த பாடல் நன்றாக வந்துள்ளது. நாங்கள் இந்த பாடலின் ரஃப் காப்பியை அவருக்கு அனுப்பி இருந்தோம். அவருக்கு அது பிடித்திருந்தது. அதனால் சென்னை வந்து பாடல் பாடி கொடுத்தார். மேலும் பாடலின் டியூன்னிற்கு ஏற்றது போல் அவரது குரல் அமைந்துள்ளது. இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்து விரைவில் நான் அறிவிப்போம் “ என்று தெரிவித்து உள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss: ‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
‘செல்லாது செல்லாது“, தீர்மானத்திற்கே தீர்மானம் போட்ட அன்புமணி ராமதாஸ் - நடந்தது என்ன.?
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
Fact Check: ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
ஹெகுரு பயிற்சி சர்ச்சை; ரோபோ சங்கர் மகள் இந்தரஜா, கணவர் கூறிய விளக்கம் சரியா - உண்மை என்ன.?
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Embed widget