மேலும் அறிய

சீனு ராமசாமி படத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மலையாள நடிகர் வினீத்!

இயக்குநர் சீனு ராமசாமி படத்தில் உள்ள பாடலை பாடுவதற்காக மலையாள நடிகர் வினீத் வெளிநாட்டில் இருந்து, சென்னை வந்து பாடல் பாடி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் சீனு ராமசாமி. ’கூடல் நகர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே  உள்ளிட்ட வெற்றிப்  படங்களை இதுவரை கொடுத்து உள்ளார்.
 
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள, மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தேதி தள்ளிப்போன வண்ணம் உள்ளன. இவரது இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம், ’இடிமுழக்கம்’. என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்த பாடம் தயாராகி வருகிறது.
 
இடிமுழக்கம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடலை ஒன்றை வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இவர் மலையாள திரையுலகில் நடிகர், பாடகர், இயக்குநர் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

சீனு ராமசாமி படத்திற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்த மலையாள நடிகர் வினீத்!
 
இதுகுறித்து படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்து உள்ளார். 
அவர் கூறுகையில், ”வினித் பாடியுள்ள இந்தப் பாடல் படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது. அப்பாடல் காதல் மற்றும் நட்பைப் பற்றிப் பேசுகிறது. எங்களுக்கு ஒரு 'அன்பான' குரல் கொண்ட ஒரு பாடகர் தேவைப்பட்டார்.
 

 நீண்ட யோசனைக்குப் பிறகு, வினித் ஸ்ரீனிவாசன் அதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்பது எனக்குத் தோன்றியது. நான் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்து இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துவிட்டது. நான் அவரது குரலின் தீவிர ரசிகன் மற்றும் அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு இருக்கிறேன். நான் அவரது பெயரை ரகுநந்தனுக்கு பரிந்துரைத்தேன். 
 
அவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. நாங்கள் அவரை அணுகினோம். அவர் என் வேலையை விரும்புவதாக என்னிடம் சொன்னபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் பாடலைப் பதிவு செய்யச் சென்னைக்கு வந்தார்.
 
’பூமலரும் காலம் இது யார் அறிவார்’ என தொடங்கும்,  இந்த பாடல் நன்றாக வந்துள்ளது. நாங்கள் இந்த பாடலின் ரஃப் காப்பியை அவருக்கு அனுப்பி இருந்தோம். அவருக்கு அது பிடித்திருந்தது. அதனால் சென்னை வந்து பாடல் பாடி கொடுத்தார். மேலும் பாடலின் டியூன்னிற்கு ஏற்றது போல் அவரது குரல் அமைந்துள்ளது. இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்து விரைவில் நான் அறிவிப்போம் “ என்று தெரிவித்து உள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget