மேலும் அறிய

Lingusamy: வெற்றிமாறன், விஷால் இருக்கப்ப எனக்கென்ன கவலை? மனம் திறந்த லிங்குசாமி

Linusamy on Vetrimaran: வெற்றிமாறன், விஷால் போன்றவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்களாக இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குநராக ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. திருப்பதி புரடக்ஷன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்தும் உள்ளார். உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக பரிணாமம் எடுத்தவர். ரன், சண்டக்கோழி, பையா என பல ஹிட்களை கொடுத்தவருக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அவர் எதிர்கொண்ட கடுமையான சூழல் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். 

 

Lingusamy: வெற்றிமாறன், விஷால் இருக்கப்ப எனக்கென்ன கவலை? மனம் திறந்த லிங்குசாமி

முயற்சி தான் முக்கியம் :

வெற்றியோ தோல்வியோ இரண்டையுமே நான் சரிசமமாக தான் பார்க்கிறேன். அஞ்சான் படம் வெளியான சமயத்தில் மிக கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டேன். எங்கும் தேங்கி விட கூடாது. எந்த சிக்கல் தடங்கல் வந்தாலும் அதை கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். முயற்சி செய்வதை மட்டும் நிறுத்தவே கூடாது என்ற எண்ணம் மட்டும் என்னுடைய மனதில் இருந்து கொண்டே இருந்தது.  நான் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் என்னுடைய நண்பர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். வெற்றிமாறன், விஷால் போன்றவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்களாக இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும். 

 

Lingusamy: வெற்றிமாறன், விஷால் இருக்கப்ப எனக்கென்ன கவலை? மனம் திறந்த லிங்குசாமி
வெற்றிமாறன் சொன்ன அந்த வார்த்தை :

ஒரு நாள் வெற்றிமாறன் எனக்கு போன் செய்து பேசினார். என்னை ஆபிசுக்கு வரச்சொல்லி பேசினார். நான் உங்களுக்கு இந்த நேரத்தில் படம் பண்ணி கொடுத்தா உங்களுக்கு பயன்படுமா? நான் பண்ணட்டுமான்னு கேட்டார். இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பெரிய ஹிட் இயக்குநராக இருக்கும் போது நான் வெற்றிமாறனுக்காக பேசுவேனா என எனக்கே தெரியாது. அவர் சொன்னது எல்லாம் பெரிய வார்த்தை. இன்னைக்கு கூட அவர் ரெடியா இருக்கார். அதற்காக அட்வான்ஸ் கொடுக்க போன கூட வாங்கமாட்டார். நான் உங்களுக்காக படம் பண்றேன். என்னைக்குனு மட்டும் சொல்லுங்க என சொன்னாரு. அவர் சொன்னது எல்லாம் பெரிய வார்த்தை. இந்த வாழ்க்கையில நான் இது போன்ற நல்ல நண்பர்களை சம்பாதிச்சு வைச்சு இருக்கேன்" என்றார்.

பையா 2:

2010ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி - தமன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பையா' படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இப்படம் மூலம் மீண்டும் லிங்குசாமி கம்பேக் கொடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget