மேலும் அறிய

Ilayaraaja: ”இளையராஜா அமைதியானவர்..அடக்கமானவர்” - உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்!

Ilayaraja Copyright Case : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ‘இசைஞானி’ என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

Ilayaraja Copyright Case : காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா தொடர்ந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர், ‘இசைஞானி’ என அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் இளையராஜா. 1500 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ நிறுவனமும், அகி என்ற இசை நிறுவனமும் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் பாடல்களை பயன்படுத்தியதற்கு ஆட்சேபனை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

2019 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, “பாடல்கள் மீது அவருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இருந்தாலும் தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை இருக்கிறது” என உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து இளையராஜா மேல்முறையீட்டு செய்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பாடல்களை இசை நிறுவனம் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் பாடல்களுக்கான காப்புரிமை தயாரிப்பாளரிடம் உள்ளதால், ஒப்பந்தம் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த விசாரணையில் இசை நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் என தன்னை நினைக்கிறார்” என கருத்து தெரிவித்தார். 

ஆனால் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இதற்கு பதிலளித்த நீதிபதி மகாதேவன், ‘முத்துசாமி தீட்சிதர், தியாகராஜர், சியாமா சாஸ்திரி ஆகிய இசை மும்மூர்த்திகள் தான் எல்லோருக்கும் மேலானவர்கள். ஆனால் இளையராஜா விஷயத்தை இந்த கருத்தை கூற முடியாது’ என தெரிவித்திருந்தார். அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பாடல்கள் பயன்படுத்திய விவகாரத்தில் காப்புரிமையில் தனது உரிமை தான் மேலானது என்ற கருத்தையே இளையராஜா கூறினார். அவர் அமைதியானவர், அடக்கமானவர், சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதித்து நடக்கக்கூடியவர் என தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget