மேலும் அறிய

Kamal Haasan: உயர்ந்த உள்ளம் படத்தில் ஒரு கையால் சண்டை போட்ட கமல்.. 28 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த உண்மை..!

உயர்ந்த உள்ளம் படத்தில் கமல் ஏன் ஒரு சண்டைக் காட்சியில் வித்தியாசமாக நடித்தார் என்ற தகவலை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

உயர்ந்த உள்ளம் படத்தில் கமல் ஏன் ஒரு சண்டைக் காட்சியில் வித்தியாசமாக நடித்தார் என்ற தகவலை ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

ரசிகர்களை கவர்ந்த உயர்ந்த உள்ளம்

கடந்த 1985 ஆம் ஆண்டு கமர்ஷியல் இயக்குநர்களின் முன்னோடி என அழைக்கப்படும்  எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘உயர்ந்த உள்ளம்’. ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய நிலையில் இளையராஜா இசையமைத்திருந்தார்.  வாலி, வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். 

கவலையே தெரியாமல், குடிப்பது, சீட்டாடுவது, நண்பர்களுக்கு உதவுவது என்றிருக்கும் கமலிடம் வேலையாளாக சேர்ந்து பணத்தை அபகரிப்பார் நண்பர் ராதாரவி. அதேசயம் வீட்டு வேலைக்காரர் நாகபிள்ளையின் உறவுக்கார பெண் அம்பிகா மீது கமல் காதல் வயப்படுவார். சொத்துக்களை எல்லாம் இழந்து நிற்கதியான நிலையில் நாகபிள்ளை வீட்டில் அடைக்கலமாவார். பின்னர் அம்பிகா உதவியால் ஆட்டோ ஓட்டுவார். இந்த மோசமான உலகத்தை புரிந்து கொள்ளும் கமல், தனது உயர்ந்த உள்ளத்தால் அனைவரிடமும் பாராட்டைப் பெறும் காட்சிகளோடு இந்த கதை அமைக்கப்பட்டிருக்கும். 

இளையராஜா இசையில் எங்கே என் ஜீவனே, காலைத் தென்றல், வந்தாள் மகாலட்சுமியே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் 50வது படமாகும். ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் உயர்ந்த உள்ளம் படம் வெற்றியைப் பெற்றது. 

ரகசியத்தை போட்டுடைத்த ஏவிஎம் நிறுவனம்

இதனிடையே தான் தயாரித்த படங்களில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்களை அவ்வப்போது சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தும் ஏவிஎம் நிறுவனம் “உயர்ந்த உள்ளம்” படம் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த படத்தில் மதுபான விடுதியில் ஒரு சண்டை காட்சி இடம் பெற்றிருக்கும். இதில் கமல் வித்தியாசமாக சண்டை போட்டிருப்பார். அதாவது இடதுகையை மட்டுமே உபயோகித்திருப்பார். அதற்கான காரணம் என்ன என்பதை ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதாவது, “உயர்ந்த உள்ளம் படப்பிடிப்பிற்கு முன்னதாக கமலின் வலது கையில் காயம் ஏற்பட்டது. சண்டைக் காட்சிக்காக அவர் வந்தபோது, ​​ஜூடோ ரத்தினம் சார் மற்றும் எஸ்பி முத்துராமனிடம் காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, திட்டமிட்ட காட்சியில் ஒரு ஷாட்டைக் கூட மாற்ற வேண்டாம் என  என்று கூறினார். மேலும் தன்னால் திட்டமிட்டபடி முழு காட்சியையும் செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.  ஆனால் அவரது இடது கையால் அதைச் செய்தார்! படத்தில் நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவருடைய வலது கை பயன்படுத்தப்படாமல் இருப்பதை என்பதை நீங்கள் காணலாம். திட்டமிட்ட காட்சியை 100% ஒரு கையால் செயல்படுத்தும் இந்த திறமையைக் கொண்டிருப்பது மேஜிக் தான்” என ஏவிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Embed widget