Simbhu Case: சிம்பு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அபாராதத் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு பரப்பியதாக தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மீது 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சிம்பு தொடர்ந்த வழக்கில், 1000 நாட்கள் கடந்தும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அபாராதத் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















