மேலும் அறிய

இதுதான் நடந்த உண்மை.! சாவித்திரிதான் குடும்பத்தை கலைத்தார் - ஜெமினி கணேசன் மகள் ஃப்ளாஷ் பேக்

மகாநடிகை படம் வெளியானபோது நடிகர் ஜெமினி கணேசன் மீது மிகவும் மோசமான பிம்பம் ஏற்பட்டது. அப்போது அவரது மகள் கமலா செல்வராஜ் ஒரு மனம் திறந்த பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மகாநடிகை படம் வெளியானபோது நடிகர் ஜெமினி கணேசன் மீது மிகவும் மோசமான பிம்பம் ஏற்பட்டது. அப்போது அவரது மகள் கமலா செல்வராஜ் ஒரு மனம் திறந்த பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பேட்டியில் இருந்து..

அப்பாவின் அழகு சினிமாவில் இருந்த அத்தனை பெண்களையும் ஈர்த்தது. அவர் அழகைப் பார்த்து மயங்காத பெண்களே கிடையாது. அப்படி மயங்கியவர் தான் சாவித்திரி. சாவித்திரி ரொம்ப பொசஷிவ், படிக்காதவர். அப்பா தான் அவருக்கு தமிழ், ஆங்கிலம், கார் ஓட்டுதல், குதிரையேற்றம் என எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர். அப்பாவுக்கு இளகிய மனசு.
சாவித்திரியை அவர் சித்தப்பா வளர்த்துள்ளார் சித்தப்பா தொந்தரவு தாங்காமல் எங்க வீட்டுக்கு ஒருநாள் கொட்டும் மழையில் ஓடி வந்தார். அப்பா இரக்கப்பட்டு தாலி கட்டி அந்தஸ்து கொடுத்தார். நாங்கெல்லாம் வளர்ந்த குழந்தைகள். நாங்க ஸ்கூலுக்குப் போனப்பா, அப்பா சாவித்திரியை கல்யாணம் பண்ணிக்கிட்டாராமே என்று கேட்டார்கள். நாங்கள் தெரியாது என்று சொல்வோம்.

சாவித்திரிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது, ஆங்கிலம், குதிரை ஓட்ட, கார் ஓட்ட சொல்லிக் கொடுத்தார். அப்பா எந்தக் குடும்பத்தையும் கெடுத்ததில்லை. சாவித்திரி தான் எங்க குடும்பத்தை கலைத்தார். 30 வருடங்கள் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி என கொடிகட்டிப் பறந்தனர்.

எங்க பாட்டி ஒரு தெய்வம். அவர் சின்ன வயசுல கணவரை இழந்துவிட்டு துறவிபோல் வாழ்ந்தார். அவரோட ஆசியில் தான் நாங்க 4 பெண்களும் நல்லா இருக்கிறோம். அந்தப் பெண் பண்ண பூஜையால் தான் இன்று நன்றாக வாழ்கிறோம்.
15 வருடங்கள் அப்பாவை மிரட்டி அங்கேயே வைத்திருந்தார் சாவித்திரி. ஒருநாளும் இரவு அப்பா இங்கே தங்கியது இல்லை. பகலில் வருவார் சென்றுவிடுவார். அப்பா மேலே அம்மாவுக்கு கொள்ளை காதல்.  

அந்தப் படத்தில் காட்டியதுபோல் அப்பா சாவித்திரியை தெருவில் விடவில்லை. சாவித்திரி மகள் தான் அவர் நடுத்தெருவில் நிற்கக் காரணம். கடன் தொல்லையால் பெங்களூருவில் கோமாவில் விழுந்தார். அப்புறம் சதீஷை வளர்த்ததே அம்மா தான். சாவித்திரியை நினைத்து நினைத்துதான் அப்பா குடித்தார். அப்பா சாவித்திரிக்கு குடிக்கச் சொல்லிக் கொடுக்கவில்லை.
அகங்காரம், மண்டக்கர்வம் தான் சாவித்திரியின் அழிவுக்குக் காரணம். அப்பா என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்.

ஆனா அப்பாவை அவரும் ரொம்ப காதலித்தார். அப்பாவை அப்படி கவனித்துக் கொள்வார். அப்புறம் சினிமாவில் காட்டினதுபோலத் தான் அவர் வீட்டில் பட்டுப்புடவைகளும், நகைகளும் இருக்கும். சாவித்திரி வீடு கட்டியபோது அப்பா வீட்டில் நீச்சல் குளம் கூடாது என்றார். ஆனால் அவர்  ஹார்ட் ஷேப் ஸ்விம்மிங் பூல் கட்டினார். என் அம்மாவின் கண்ணீர் சாவித்திரிக்கு சாபமாக அமைந்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
Embed widget