![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vignesh Shivan: ’அன்பால் தானா வந்த பிரியாணி..’ நயன் - விக்னேஷ் வீட்டுக்கு எத்தன பக்கெட் பிரியாணி தெரியுமா?
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகை நயன்தாரா நடிக்கும்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு காதலானது.
![Vignesh Shivan: ’அன்பால் தானா வந்த பிரியாணி..’ நயன் - விக்னேஷ் வீட்டுக்கு எத்தன பக்கெட் பிரியாணி தெரியுமா? Director Vignesh Sivan has posted on his Instagram page that they have got a lot of biryani for Ramzan - in pics Vignesh Shivan: ’அன்பால் தானா வந்த பிரியாணி..’ நயன் - விக்னேஷ் வீட்டுக்கு எத்தன பக்கெட் பிரியாணி தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/22/653ec141f26963061f426ae9b24f501a1682168935388571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகை தனது நடிப்பாலும், அழகாலும் கட்டிப்போட்டுள்ளார் நடிகை நயன்தாரா. இவர் நடிகர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து, தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவரது ஒரு சில ஆளுமையால் ’லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.
நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிகை நயன்தாரா நடிக்கும்போது, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கு காதலானது. தொடர்ந்து இவர்கள் கடந்த ஜீன் மாதம் இசிஆரில் உள்ள தனியார் விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தங்களது திருமண நிகழ்வை ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பப் போவதாகவும் அறிவித்து, திருமணத்திற்கான செலவையும் ஏற்றுகொண்டது. ஹனிமூன் பயணம்,வெளிநாடு சுற்றுலா, பட வேலைகளில் கவனம் என பிஸியாக இந்த தம்பதியினர், கடந்த இரு மாதங்களாக பல்வேறு கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்தனர். இது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட நயன்தாரா சட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.
ஆனால் சட்ட முறைகளை பின்பற்றி தான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவ்வப்போது குழந்தைகளின் முகத்தை காட்டாமல் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாகவோ, பதிவாகவோ வெளியிடுவது வழக்கம். கடந்த மாதம் கூட மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா தனது கணவர் மற்றும் மகன்களுடன் வந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் உலக் தெய்விக் N சிவன் என்று பெயரிட்டதாக தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்த சூழலில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ரம்ஜான் பண்டிக்கைக்கு தங்களுக்கு ஏகப்பட்ட பிரியாணி வந்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “அன்பால் தானா சேர்ந்த பிரியாணி...” இன்று ரம்ஜான் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.. ஈத் முபாரக்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)