![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Thangar Bachan on Jallikattu Prize: “ஜல்லிக்கட்டில் வென்றவருக்கு கார் பரிசா? முதல்வர் சிந்திக்க வேண்டும்” - தங்கர்பச்சான்
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்!
![Thangar Bachan on Jallikattu Prize: “ஜல்லிக்கட்டில் வென்றவருக்கு கார் பரிசா? முதல்வர் சிந்திக்க வேண்டும்” - தங்கர்பச்சான் Director Thangar Bachan statement criticize car prize offered for jallikattu winner Thangar Bachan on Jallikattu Prize: “ஜல்லிக்கட்டில் வென்றவருக்கு கார் பரிசா? முதல்வர் சிந்திக்க வேண்டும்” - தங்கர்பச்சான்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/18/c23c1d7a395f24c88e97cccffc6f9082_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து பாதுகாப்பு விதிமுறைகளோடு ஜல்லிக்கட்டை நடத்த அரசு அனுமதியளித்த நிலையில், தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளனமான இளைஞர்கள் பங்கு கொள்ளும் இந்தப் போட்டியில் அதிக காளைகளை பிடிக்கும் நபருக்கு கார், மோதிரம், பைக் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த பரிசுகளை கொடுப்பதற்கு பதிலாக உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும் என்று பிரபல இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை வைத்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்தபோது, இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.
வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து பங்குபெறும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம். இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)