மேலும் அறிய

Mari Selvaraj: ”நான் யாருன்னு நிரூபிக்க வேண்டியது இல்ல” - மீட்பு பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு மாரி பதிலடி..!

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதை விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். 

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஏற்ற தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பையும் தாண்டி அதீத கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் பாய்ந்தது. 

இந்த மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே திருநெல்வேலி அருகேயுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் தான் இயக்குநர் மாரி செல்வராஜ் வீடு உள்ளது. வெள்ளம் இரு மாவட்டங்களை சூழந்த நிலையில், உதவி கேட்ட மக்களுக்கு  தேவையானவற்றை அவர் வழங்கினார்.

மேலும் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்” என தெரிவித்திருந்தார். 

அதேசமயம் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மாரி செல்வராஜ் சென்றது இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் விடிய விடிய மீட்பு பணியில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்கினார். மேலும் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் மீட்கப்பட்ட விவரங்களை தெரிவித்ததோடு, எல்லாரும் நிச்சயமாய் மீட்கபடுவார்கள் .உறவினர்கள் அச்சபடவேண்டாம்” எனவும் நம்பிக்கையூட்டினார். 

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ““என் கலையும் கடமையும்  நான் யார் என்று நிரூபிப்பது அல்ல …நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என தன்னுடைய ஏரியாவில் உள்ள வெள்ள நீர் பாதிப்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget