மேலும் அறிய

தொடரும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு- உயர்நிலைக் குழு அமைப்பு

இந்தக் குழு தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றத்தின் (NETF) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர் வளாகத்தில் 25 வயதுடைய முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர், விடுதிக் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களுக்குள் அந்த வளாகத்தில் நடக்கும் இரண்டாவது தற்கொலைச் சம்பவம் இதுவாகும். அதேபோல ஐஐடிகளில் கடந்த 4 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட மத்தியக் கல்வி அமைச்சகம், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலன் காக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 3 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

குழுவின் நோக்கம் என்ன?

இந்தக் குழு தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றத்தின் (NETF) தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூல்சந்த் மருத்துவமனையின் மூத்த மனநல மருத்துவர் ஜிதேந்திர நாக்பால் மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம், மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும், வளாகங்களில் சுமூகமான சூழலை உருவாக்கவும் மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை (Framework Guidelines) வெளியிட்டிருந்தது. இந்த வழிகாட்டுதல்கள் ஐஐடி கான்பூரில் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றன என்பதை இக்குழு ஆய்வு செய்யும்.

மேலும், ஐஐடி கான்பூரில் கடந்த காலங்களில் நடந்த தற்கொலைச் சம்பவங்கள், அதற்கான பின்னணி, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மனநல ஆலோசனை வசதிகள் மற்றும் குறை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் இந்தக் குழு விரிவாக விசாரிக்கும்.


தொடரும் ஐஐடி மாணவர்கள் தற்கொலை: அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு- உயர்நிலைக் குழு அமைப்பு

15 நாட்களில் அறிக்கை

கல்வி நிலையங்களில் உள்ள கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து, இனிவரும் காலங்களில் மாணவர்கள் மன அழுத்தத்தால் தவறான முடிவுகளை எடுப்பதைத் தடுக்கத் தேவையான பரிந்துரைகளை இந்தக் குழு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஐடி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, அடுத்த 15 நாட்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுப் பயிற்சி, மாணவர்களிடையே ஒருவருக்கொருவர் உதவும் ‘நட்பு ரீதியிலான வழிகாட்டுதல்’ (Buddy- mentor system), மற்றும் மன அழுத்தத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உதவுதல் போன்றவை அரசின் வழிகாட்டுதல்களில் உள்ள முக்கிய அம்சங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
"முதலில் எங்களை நிரந்தரமாக்குங்கள், அப்புறம் TRB தேர்வு நடத்துங்கள்!" - முதல்வர் விஜய்யின் ஒற்றைப் பேனா முனையில் காத்திருக்கும் எதிர்காலம்!
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!
புதுச்சேரி: மொபைல் ஆப்பில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு - புதிய வசதி அறிமுகம்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
10 தேசிய விருதுகளை வாங்கி குவித்த தமிழ் திரைத்துறை.! தனுஷ், ஜி.வி.பிரகாஷை பாரட்டிய சிஎம் விஜய்
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி
R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Embed widget