சாராயம் குடிச்ச மாதிரி ஆடாதீங்க...சொந்த ஊர் ரசிகர்களை கண்டித்த மாரி செல்வராஜ்
திருநெல்வேலியில் பைசன் படத்தின் திரையிடலின் பின் ரசிகர்களிடம் மாரி செல்வராஜ் பேசியது சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து சமூக வலைதளம் முழுவதும் காரசாரமான விவாதம் தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் பைசன் படத்தை மாரி செல்வராஜின் சொந்த ஊராந திருநெல்வேலியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர் பைசன் படக்குழுவினர் அப்போது தனது சொந்த ஊர் ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் கூறியுள்ள அறிவுரை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
பைசன் படத்தால் பரபரப்பான சோசியல் மீடியா
பா ரஞ்சித்தின் நீலம் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள பைசன் திரைப்படம் இந்த தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இது மாரி செல்வராஜின் ஐந்தாவது படமாகும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சாதியை மையமாக வைத்து நிகழ்வு வன்முறைச் சூழல். இந்த பின்னணியில் இருந்து வரும் நாயகன் கபடியில் தேசிய அளவில் சாதித்து காட்டுவதே பைசன் படத்தின் மையக்கதை. துருவ் விக்ரம் , பசுபதி , ரஜிஷா விஜயன் , அமீர் , லால் , அனுபமா பரமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றாலும் குறிப்பிட்ட சிலர் மட்டும் படத்தையும் இயக்குநரையும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலியில் பைசன் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் சாதிக் கொடியை ஏந்தியது பரபரப்பாக பேசப்பட்டது. இப்படியான நிலையில் இப்படியான நிலையில் பைசன் படத்தை மாரி செல்வராஜின் சொந்த ஊராந திருநெல்வேலியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர் பைசன் படக்குழுவினர் அப்போது தனது சொந்த ஊர் ரசிகர்களுக்கு மாரி செல்வராஜ் கூறியுள்ள அறிவுரை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது
சாராயம் குடிச்ச மாதிரி ஆடாத
பைசன் படத்தின் திரையிடல் முடிந்த பின் மாரி செல்வராஜை பார்த்து ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். இதனைப் பார்த்து கடுப்பான மாரி செல்வராஜ் ' நான் உனக்கு சாராயம் கொடுக்கல. நான் உனக்கு கொடுத்திருப்பது புத்தகம். என்னுடைய சினிமா ஒரு புத்தகமா இருக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுறேன். அதனால் தயவுசெய்து சாராயம் குடித்த மாதிரி ஆடாதீர்கள்.
உனக்கு நான் சாராயம் கொடுக்கல கையில புத்தகம் தான் கொடுக்கிறேன் என்னோட படத்தை புத்தகமா பாரு - @mari_selvaraj
— Movies Singapore (@MoviesSingapore) October 20, 2025
For a few days people were celebrating with caste flags, bold answer by #MariSelvaraj 🖤
pic.twitter.com/89y3hrIw2P





















