மேலும் அறிய

எது உண்மையான காதல்? தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு சமயத்தில் செல்வராகவன் கொடுத்த சூப்பர் விளக்கம்!

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்தின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், செல்வராகவன் உண்மையான காதல் குறித்து கூறியுள்ள தகவல் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். காதல் கொண்டே, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாக படம் இயக்குவதைக் காட்டிலும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

செல்வராகவன்:

திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள், தங்களின் படங்களில் நடிக்கும் நடிகைகளை காதல் திருமணம் செய்து கொள்வது பல வருட வழக்கமாக இருக்கும் நிலையில், இயக்குனர் செல்வராகவனும் தான் இயக்கிய காதல் கொண்டேன், ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார்.

சில வருடத்திலேயே சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த இவர், பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி கீதாஞ்சலி என்கிற தன்னுடைய துணை இயக்குனரையே காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய மனதில் படும் கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

உண்மையான காதல் எது?

அந்த விதத்தில், இப்போது உண்மையான காதல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார். இதுகுறித்து மிகவும் உணர்வு பூர்வமாக பேசியுள்ள செல்வா...  "காதலிக்கும் போது ஆரம்ப காலகட்டங்களில் யாராக இருந்தாலும் என்னதான் தன்னிடம் எதிர்மறையான பண்புகள் இருந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் நேர்மறையான பண்புகள் அல்லது குணங்களை மட்டுமே வெளிக்காட்டுவர்கள். இது எல்லோருக்கும் பொதுவான இயல்பு தான். இதற்கு காரணம் எதிர்மறையான குணங்களை பற்றி தெரிந்து விட்டால் நம்மை விட்டு சென்றுவிடுவார்களோ என்ற பயன் தான்.


எது உண்மையான காதல்? தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு சமயத்தில் செல்வராகவன் கொடுத்த சூப்பர் விளக்கம்!

இதுவே காதல் திருமணத்திற்கு பிறகு நேர்மறையான குணங்கள் குறைந்து எதிர்மறையான குணங்கள் வெளிப்படுகிறதோ அப்போது புரிய வரும். எங்கு, எது உண்மையான காதல் என்று. உங்களிடம் எதிர்மறையான குணங்கள் இருந்து அதனை ஏற்றுக்கொண்டு உங்களை நல்வழிப்படுத்துவதே அந்த உண்மையான காதலின் வேலையாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும், காதலிக்கும் போது ஒருவரிடமிருந்த அதே குணங்கள் திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் எல்லோரிடமும் இருப்பதில்லை. ஏனென்றால், காதலிக்கும் போது எங்கு நம்மை விட்டு சென்றுவிடுவார்களோ, ஏமாற்றிவிடுவார்களோ என்று ஒரு வித பயம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே திருமணம் ஆன பிறகு ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி நம்மை விட்டு போக முடியாது என்று ஒரு ஆணவம், திமிரு வரும். அப்போதுதான் ஒருவருடைய எதிர்மறையான குணங்கள் வெளிப்படும்.

அதிகரிக்கும் விவாகரத்து:

யாருமே காதல் திருமணத்திற்கு பிறகு அதே குணங்களை யாரிடமும் எதிர்பார்க்க கூடாது. ஆனால், திருமணத்திற்கு பிறகும் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு வாழ்வதே காலங்காலமாக நிலைத்து நிற்கும். இதில் பெரும்பாலான காதலர்கள் தோற்றுவிடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே ஜெயிக்கிறார்கள்.
இன்றைய உலகில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சட்ட நெறிமுறைகளும் கடுமையாக இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இது எளிதில் விவாகரத்து கிடைக்க வழி வகை செய்கிறது. ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொள்ளாததும், இனிமேல் தங்களுக்குள் ஒத்து வராது என்பதை புரிந்து கொண்டதாலும் தான் இன்றைய உலகில் நீதிமன்றத்தை நாடிச் செல்கிறார்கள்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தீர்ப்பு:



எது உண்மையான காதல்? தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு சமயத்தில் செல்வராகவன் கொடுத்த சூப்பர் விளக்கம்!

அதனை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். அன்றைய காலகட்டம் மாதிரி எல்லாம் இப்போது கிடையாது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் சொன்னாங்க. அதற்கேற்ப ஆண்களும் ஆட்டம் போட்டாங்க. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்ல. பெண்களும் ஆண்களுக்கு நிகராக முன்னேற்றம் அடைந்து விட்டார்கள். அவர்களுக்கும் சம உரிமையும் இருக்கிறது.
காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு வாழ்வதே இன்றைய உலகில் விவாகரத்தை குறைக்க உதவும் என்று கூறியிருக்கிறார். தனுஷ் விவாகரத்து பெரும் இந்த சமயத்தில் செல்வாவின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget