மேலும் அறிய

Manoj Bajpai : ஒரு ரூபாய் கூட வாங்காமல் நீதி வாங்கிக்கொடுத்த வழக்கறிஞர்.. மனோஜ் பாஜ்பாய் ஏற்று நடித்திருக்கும் சோலாங்கி கதாபாத்திரத்தின் நிஜக் கதை

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்.

பாலிவுட் நடிகர் நடித்து அண்மையில் ஜீ ஃபைவில் வெளியாகியிருக்கும் படம்  சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹே (sirf ek bandha kaafi hai). பிரபல வழக்கு ஒன்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். இந்த படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த மனோஜ் வாஜ்பாய் ”சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கட்டத்திற்கு மேல் இந்த போக்கு நின்றாகவேண்டும். இந்தப் பிரச்சனைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு நமக்கு ஏற்படுகையில் இந்த நிலை நிச்சயம் மாறும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க மக்கள் கூடுதல் சிரத்தை எடுத்து சிந்திக்க வேண்டும்” என கூறியிருக்கிறார்.

சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹே { sirf ek bandha kaafi hai). படத்தின் கதை

 கடந்த 2013 ஆம் ஆண்டு ஜோத்பூரில் நடந்த ஒரு நிஜக்கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். ஆசாராம் பாபு என்று அறியப்படும்  ஹசுமை சிமலனி ஹார்பலனி  என்கிற சாமியாரின் ஆசிரமத்தில் தங்கியிருந்த 16 வயது சிறுமி ஆசாராம் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்தார். ஆசாராம் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை பூனம் சந்த் சோலாங்கி என்கிற வழக்கறிஞர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக வாதிட்டார். இந்தியாவின் பிரபல வழக்கறிஞர்களான ராம் ஜெத் மலானி, சல்மான் குர்ஷித் மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆகியவர்களுடன்  ஆகியவர்கள் ஆசாராம் சார்பாக வாதிட்டனர். இவர்களை எதிர்த்து  கிட்டதட்ட ஐந்தாண்டுகள் சோலாங்கி  இந்த வழக்கை விடாமுயற்சியுடன் வாதாடி இந்த வழக்கை வென்றார்.

யார் இந்த சோலாங்கி?

ராஜஸ்தானில் ஒரு மத்தியதர குடும்பத்தில் மூன்று  பெண்களுக்கு சகோதரனாக  பிறந்தவர் சோலாங்கி. கடும் சிரமங்களுக்கு மத்தியில் தனது வக்கீல் படிப்பை முடித்த சோலாங்கி போக்ஸோ சட்ட வழக்குகளை வாதாடுவதில்  திறமையானவராக அறியப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் சோலாங்கியை இந்த வழக்கை தங்கள் சார்பாக வாதாட கேட்டுக்கொண்டனர். இந்த வழக்கை ஐந்து ஆண்டுகள் கடும் போராட்டங்களுக்குப்பின் வெற்றிபெற்ற சோலாங்கி ஒரு ரூபாய்கூட சம்பளமாக வாங்கவில்லை.

”நாங்கள் நீதிக்காக போராடிக்கொண்டிருந்தோம், பணத்திற்காக அல்ல. அதே நேரத்தில் எதிர்தரப்பில் ஒரு நாள் விசாரணைக்காக மட்டுமே லட்சக்கணக்கில் பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சூழலில் என 2018-ஆம் ஆண்டு இந்தியன் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் சோலாங்கி. மேலும் இந்த வழக்கில் இருந்து வெளியேறச்சொல்லி பல கொலை மிரட்டகளும் கோடிக்கணக்கில் பணமும் லஞ்சமாக கொடுக்க முயற்சித்தார்களாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
68
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 03:08 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
Embed widget