மேலும் அறிய

Chrisann Perera: ‘கழிவறை நீரில் காபி குடித்தேன்..’ ஷார்ஜா சிறை தண்டனையால் நொந்துபோன பாலிவுட் நடிகை..!

Chrisann Perera: பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா, சமீபத்தில் போதை பொருள் கடத்தியதாக ஷார்ஜா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆலியாபட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்திருந்த சதக் 2 படத்தில் நடித்திருந்தவர், கிறிசன் பெரேரா. இவர், ஒரு தொடரின் நடிகர்கள் தேர்விற்காக இந்த மாதத்தின் தாெடக்கத்தில் துபாயில் உள்ள ஷார்ஜாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவர் எடுத்து வந்திருந்த பையில், சிறிய அளவு போதை பொருள் இருந்ததாக கூறி அவரை ஷார்ஜா போலீசார் கைது செய்தனர். 

சிறை தண்டனை:

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கிறிசன் பெரேரா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சமரசம் செய்யாத நாடுகளில் ஒன்று, துபாய். அங்கு போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்குவோர் கடுமையான சிறை தண்டனையை அனுபவிப்பார். அந்த வகையில், நடிகை கிறிசன் பெரேரா ஷார்ஜா சிறையில் சிக்கியுள்ளார். இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து 26 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து நடிகை விடுதலை செய்யப்பட்டுள்ளார். 


Chrisann Perera: ‘கழிவறை நீரில் காபி குடித்தேன்..’ ஷார்ஜா சிறை தண்டனையால் நொந்துபோன பாலிவுட் நடிகை..!

இதைத்தொடர்ந்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் கிறிசன் பெரேரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கழிவறையில் நீரில் காபி போட்டு குடித்ததாகவும் துணி துவைக்கும் பவுடரை பயண்படுத்தி தலைக்கு குளித்ததாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது முழு கடிதம் பின்வருமாறு, 

“பேனாவையும் காகிதத்தையும் கண்டு பிடிக்க எனக்கு 3 வாரங்கள் ஆகிவிட்டது. கழிவறை நீரில் காபி போட்டு குடித்து, துணி துவைக்கும் பவுடரில் தலைக்கு குளித்த பிறகு நான் சில பாலிவுட் படங்களை பார்த்தேன். அதை பார்த்த போது என்னுடைய கனவுதான் என்னை இதுவரை கொண்டு வந்துள்ளது என்பதை உணர்ந்தேன். நான், இந்தியராக இருப்பதற்கும் இந்தியாவை சேர்ந்த திரைத்துறையில் இருப்பதையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என்று தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த கடிதத்தில் கிறிசன் பெரேரா கூறியிருந்தார். 

கிரிஸானை சிக்க வைத்த நபர்:

மும்பையை சேர்ந்த ஆண்டனி பால் என்ற நபர்தான் கிறிசன் பெரேராவை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளார். கிறிசன் பெரேரா மற்றும் அவர் குடும்பத்தினர் தங்கியுள்ள அதே அடுக்குமாடி குடியிருப்பில்தான் அந்த நபரும் தங்கியிருந்துள்ளார். பெரேரா வழக்கில் ஆண்டனியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 


Chrisann Perera: ‘கழிவறை நீரில் காபி குடித்தேன்..’ ஷார்ஜா சிறை தண்டனையால் நொந்துபோன பாலிவுட் நடிகை..!

பழிவாங்கும் நோக்கம்!

காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு, ஆண்டனி பால் குறித்த பல உண்மைகள் வெளிவந்துள்ளன. பட்டப்படிப்பு வரை முடித்துள்ள இந்த நபர், 2012ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார். இதையடுத்து மும்பைக்கு குடிபெயர்ந்துள்ள இவர், கேக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததார். இவர், பலரை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அவரால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆவது ஆளாக, பாலிவுட் நடிகை பெரேராவும் சிக்கியுள்ளார். 

ஒரு தெருநாயை தாக்க இருந்த ஆண்டனியை நடிகை கிறிசனின் தாயார் தடுத்து நிறுத்துயுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. இரண்டாவது கொரோனா அலையின் போது, முகக்கவசம் அணியுமாறு ஆண்டனியிடம் காட்டமாக நடிகையின் தாயார் கூறியுள்ளார். இதனால் கடுப்பான ஆண்டனி, கிறிசன் குடும்பத்தாரை பழிவாங்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என மும்பை போலீஸார் கூறியுள்ளனர் 


Chrisann Perera: ‘கழிவறை நீரில் காபி குடித்தேன்..’ ஷார்ஜா சிறை தண்டனையால் நொந்துபோன பாலிவுட் நடிகை..!

யார் இந்த ஆண்டனி?

ஆண்டனி எனும் இந்த நபர், கடந்த ஆண்டில் மட்டும் 4 பேரை போதை பொருள் கடத்தல் வழக்கில் பழிவாங்கும் நோக்கத்திற்காக சிக்கவைத்துள்ளார். அவர் பழிவாங்க நினைக்கும் நபர்களை ஏதாவதொரு கதையைக்கட்டி ஷார்ஜாவிற்கு பயணம் செய்ய வைத்து, அவர்களுக்கு தெரியாமல் சிறிய அளவிளான போதை பொருளை அவர்கள் எடுத்து செல்லும் பையில் போட்டுவிடுவாராம்.

பின்பு இவரே, ஷார்ஜாவில் உள்ள காவல் துறையினருக்கு போதை பொருள் எடுத்து வரும் நபர் குறித்த தகவல்களை கூறி அவர்களை சிக்கவைத்துவிடுவாராம். இது மட்டுமன்றி, அப்படி இவர் சிக்கவைத்த நபர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் தனக்கு ஷார்ஜாவில் ஒரு வழக்கறிஞரை தெரியும் எனக்கூறி பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவாராம். சமீபத்தில் சிக்கிய நடிகையின் குடும்பத்தினரிடமிருந்து 80 லட்சம் வரை அந்த நபர் பணம் கரக்க முயற்சித்ததாக ஆண்டனியை விசாரணை செய்த போலீஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget