மேலும் அறிய

Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” - கலங்கிய மணிச்சந்திரா!

Manichandra on Raveena: “பிக்பாஸ் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்தது உண்மை தான். அதற்காக நான் அவங்க விளையாட்டை தடுத்தேன் என்பது எல்லாம் உண்மையில்லை”

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் நிறைவு பெற்றது. இந்த சீசன் டைட்டில் வின்னராக அர்ச்சனாவும், ரன்னர் அப்பாக மணிச்சந்திராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு மணிச்சந்திரா முதன்முறையாக யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தனக்கும் ரவீணாவுக்கும் இடையே இருந்த உறவு குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி உள்ளா மணிச்சந்திரா. 

 

Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” - கலங்கிய மணிச்சந்திரா!

 

எனக்கும் ரவீணாவுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னரே நல்ல ஒரு நட்பு இருந்தது. அவங்க பிக்பாஸ் வீட்டுக்கு வராங்க என்ற விஷயம் எனக்கு கடைசி நேரத்தில் தான் தெரியவந்தது. அப்போ எனக்கு ரொம்ப யோசனையாவே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போகலாமா இல்லை வேணாமா? போனா எங்க இரண்டு பேராலும் சகஜமா விளையாட முடியுமா? இப்படி பல கேள்விகள் இருந்தது. சரி என்ன ஆகிவிடப் போகுது என என் மேல நம்பிக்கை இருந்ததால தான் நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போனேன். 

பிக்பாஸ் வீட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் நட்பைத் தாண்டிய ஒரு உறவு இருந்தது உண்மை தான். அதற்காக நான் அவங்க விளையாட்டை தடுத்தேன் என்பது எல்லாம் உண்மையில்லை. பலரும் “நான் சேஃப் கேம் ஆடுறேன், ரவீணாவை வைத்து தான் விளையாடுறேன்” இப்படி பல குற்றச்சாட்டுகளை சொன்னார்கள். ஆனால் எனக்கு தெரியும் நான் யார் என்பது, அது எனக்கு போதும். 

ரவீணா அம்மா வீட்டுக்கு வந்த போது நான் கொடுத்த ரியாக்ஷன் என்னையும் அறியாமல் வந்தது தான். சரி ஸ்டோர் ரூமுக்கு வரச்சொன்னதும் அவங்க சேஃப் பண்ண தான் அப்படி சொல்றாங்க என நினச்சேன். ஆனால் அங்க ரவீணா அம்மா இருப்பாங்க என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. அது இருக்க தானே செய்யும்! ஏன்னா முதல் நாள் தான் ரவீணா சொந்தகாரங்க ஒருத்தங்க வந்து பயங்கரமா என்னை ஆட்டி வச்சுட்டு போனாங்க. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலேயே அதுதான் பயங்கரமான பரபரப்பு ஏற்படுத்திய ஒரு எபிசோடாக இருந்து இருக்கும் என நினைக்கிறன். 

 

Manichandra: “ரவீணா சொல்றது உண்மையில்லை, நட்பை தாண்டிய ஒரு உறவு இருந்துச்சு” - கலங்கிய மணிச்சந்திரா!

 

ரவீணா நிக்சனிடம் பேசியது பற்றி பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவங்க ஏன் அப்படி சொல்லணும் என புரியவேயில்லை. அப்படி அவங்க நினச்சு இருந்தா அதை என்கிட்டேயே சொல்லி இருக்கலாம். அது ரொம்ப வருத்தமா இருந்துது. 

நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு ரவீணா உடன் சரியாக பேச முடியவில்லை. அவர் தன்னுடைய குடும்பத்துடனும் ஜோடி நிகழ்ச்சியிலும் பிஸியாக இருக்கிறார். நானும் வேறு சில வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் எங்களால் சந்தித்து சரியாக பேச முடியவில்லை” எனப் பேசியுள்ளார்.

மணி நிறைய விஷயங்களை தன்னிடமிருந்து மறைத்துவிட்டதாக நிக்சனிடம் கூறியிருந்தார் ரவீணா. ஏற்கெனவே அவருக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் இருந்தார் என்றும், அதைப் பற்றி அவர் சொல்லவில்லை என்றும் ரவீணா பேசி உள்ளார். மேலும் மணியால் தான், தான் பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக விளையாட முடியாமல் போனது என்றும் நிக்சனிடம் பேசி உள்ளார் ரவீணா என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget