பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் மாடல் அழகி!
பிக் பாஸ் 5 வது சீசனில் பிரபல மாடல் அழகி நுழைய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

தொலைக்காட்சிகளில் வெளியாகும் ரியாலிட்டி ஷோ என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க, ரியாலிட்டி ஷோவை பார்ப்பதற்கு என்றும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
அந்தவகையில் தொலைக்காட்சிகளில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரை 14 சீசன் முடிந்த நிலையில் 15 சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதனை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
ஹிந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிக் பாஸ் 5 வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் நாகார்ஜுனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
View this post on Instagram
தெலுங்கில் தொடர்ந்து தமிழிலும் பிக் பாஸ் 5 வது சீசன் தயாராகி வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் 5 வது சீசன் தொடங்கி இருக்கிறது. கடந்த நான்கு சீசன் களை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் ஐந்தாவது சீசனிலும் தொகுத்து வழங்கு கிருக்கிறார்.
ஒவ்வொரு சீசனும் சிம்பு, அரவிந்த் சுவாமி ஆகியோர் தொகுத்து வழங்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அதே போன்றுதான் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. ஆனால் வழக்கம்போல் பிக்பாஸ் ஐந்தாவது சீசனிலும் நடிகர் கமல்ஹாசனைத் தொகுத்து வழங்குகிறார் என்பது விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட புரோமோ மூலம் தெரியவந்தது.
இதனிடையே நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலையில், இதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளான பிரியங்கா, ஜாக்குலின் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், டிக் டாக் பிரபலம் நதியா, நடிகை சகிலா நடிகை சகிலாவின் மகள் நீலா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.
அந்த லிஸ்டில் தற்போது புதிதாக மாடல் அழகி ஒருவர் இணைந்திருக்கிறார். ஆம் .. மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட்’ பட்டம் வென்ற அக்சரா ரெட்டி இதில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் கலந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, 'வில்லா டு வில்லேஜ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இடத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி
ட்ரெண்டிங் செய்திகள்





















