Praveen Gandhi : பெண்கள் சைக்காலஜி என்று கண்டதை பேசி மாட்டிக்கொண்ட பிரவீன் காந்தி..க்ளாஸ் எடுத்த நந்தினி
Bigg Boss 9 Tamil. : பிக்பாஸ் 9 தமிழ் நிகழ்ச்சியில் பெண்களைப் பெற்றி பொதுப்படையாக கருதுத் தெரிவித்ததற்காக இயக்குநர் பிரவீன் காந்தி விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

பிக்பாஸ் தமிழ் 9
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் நேற்று அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துவங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க 20 போட்டியாளர்கள் இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்கள். வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , எஃப்.ஜே , வி.ஜே பார்வதி , துஷார் , கனி, சபரி , பிரவீன் காந்தி , கெமி , ஆதிரை , ரம்யா ஜோ , வியானா , வினோத் , சுபிக்ஷா , அப்சரா சிஜே , நந்தினி , கலையரசன் , விக்ரம் , கமருதீன் ஆகியோர் இந்த ஆண்டு போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்கள்.
சிவப்பு மற்றும் நீல பேட்ஜ்
ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது அவர்களிடம் சிவப்பு மற்றும் நீல நிற பேட்ஜில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னார் விஜய் சேதுபதி. இந்த 20 போட்டியாளர்கள் அவர்கள் தேர்வு செய்த சிவப்பு மற்றும் நீல பேட்ஜ் அடிப்படையில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். நீல நிற பேட்ஜை எடுத்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் கொண்ட சூப்பர் டீலக்ஸ் அறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரம் சிவப்பு நிற பேட்ஜ் தேர்வு செய்தவர்களுக்கு சாதாரண அறைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான போட்டியாளர்கள் சிவப்பு நிற பேட்ஜை தேர்வு செய்ததால் அவர்கள் அனைவரும் பல்வேறு அசெளகரியங்களுக்கு இடையில் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த இரு அறைகளால் போட்டியாளர்கள் இடையில் மேலும் பல பிரச்சனைகள் வரும் என எதிர்பார்க்கலாம்
பெண்களைப் பற்றி பிரவீன் காந்தி கருத்து
முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இடையில் மோதல்கள் தொடங்கியுள்ளன. குறட்டை விட்டதால் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் பிற போட்டியாளர்கள் இடையில் வாக்குவாதம் பெரிதாகியுள்ளது. மேலும் இயக்குநர் பிரவீன் காந்தி பெண்களைப் பற்றி பொதுப்படையான கருத்தை பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். விக்ரம் , துஷார் மற்றும் நந்தினியுடன் பேசிய பிரவீன் காந்தி " பெண்களால் தன்னை விட அழகான இன்னொரு பெண் வந்துவிட்டால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த அழகை தூக்கி சாப்பிட என்ன செய்யலாம் என்று அவர்கள் யோசிப்பார்கள். அது பெண்களின் படைப்பு. கடவுள் படைப்பிலேயே பெண்களிடம் இரண்டு விஷயங்களை கொடுத்துவிட்டார். ஒன்று பொறாமை இன்னொன்று பேராசை. இந்த இரண்டை பெண்களிடம் இருந்து நான் எடுக்கவே முடியாது. " என பிரவீன் காந்தி பேசினார். இதை கேட்ட நந்தினி எல்லா மனிதர்களுக்கும் பொறாமை உணர்வு இருக்கதான் செய்கிறது பெண்களுக்கு மட்டும் இப்படி என்று பொதுப்படையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.





















