மேலும் அறிய

Parasakthi: கருணாநிதி எழுத சொன்ன கதையை திருடிட்டாங்க.. பராசக்திக்கு இப்படி ஒரு சோதனையா!

தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் நடிகர் சூர்யாவிடன் எனது கதையை கொடுத்துள்ளார். அவர் அதனை உதவி இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுக்க அது புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில் தற்போது அப்படம் கதை திருட்டு குற்றச்சாட்டிலும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா என பலரும் நடித்துள்ள படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் உதவி இயக்குநரான ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்துள்ளார். 

பராசக்தி படம்

 அவர் அளித்துள்ள மனுவில், நான் 2010ம் ஆண்டு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் செம்மொழி என்ற பெயரில் கதை ஒன்றை பதிவு செய்திருந்தேன். இது 1965ம் ஆண்டு இந்தி திணிப்பை கண்டித்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செம்மொழி கதையை அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம், நான் உதவி இயக்குநராக அவர் கதை, வசனம் எழுதிய பெண் சிங்கம் படத்தின் ஷூட்டிங்கின்போது கூறினேன். ஆனால் அப்போது தன்னை மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருப்பதால் கதையை தொடர்ந்து எழுதும்படி எனக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கிடையில் நான் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்த கதையை படமாக்கும் பொருட்டு பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்தேன். 

இதில் தயாரிப்பாளர் சேலம் தனசேகரன் நடிகர் சூர்யாவிடன் எனது கதையை கொடுத்துள்ளார். அவர் அதனை உதவி இயக்குநர் சுதா கொங்கராவிடம் கொடுக்க அது புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த செம்மொழி கதை கைவிடப்பட்ட நிலையில் தற்போது பராசக்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பராசக்தி படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எனது செம்மொழி கதையையும் பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இரண்டு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை ஆய்வு செய்து 2026, ஜனவரி 2ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இயக்குநர் சுதா கொங்கரா, தயாரிப்பு நிறுவனம் டான் பிக்சர்ஸூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் அனைத்து தரப்பிரனரையும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே பராசக்தி படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் வசனங்களை கட் செய்தும், காட்சிகளை நீக்கியும் தணிக்கைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில் படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இப்படியான நிலையில் கதை திருட்டு வழக்கும் சேர்ந்துள்ளது திட்டமிட்டபடி பராசக்தி வெளியாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget