ரோஜா: வீட்டுக்கு வந்தது செண்பகம் தானே... புதிய புலன்விசாரணையில் அர்ஜூன்!
திருப்பங்களும்... மாற்றங்களும் மாறாத ஒரே தொடர் ரோஜா....!

‛அர்ஜுனுக்கு, அனுவை கல்யாணம் பண்ணி வைத்து இந்த வீட்டின் மருமகளாக ஆக்க வேண்டும் என சிறு வயதிலேயே நாம் பேசியிருக்கிறோம்,’ என அன்னபூரணி பாட்டி ரோஜாவிடவும், தனது மருமகளிடம் கூறுகிறார்.
அர்ஜுனுக்கு செண்பகத்தின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறுவயதில் நினைத்தோம். அது தான் தற்போது நடைபெற்று விட்டது என்று அவரது மருமகள் எதார்த்தமாக கூற, சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் அவரை உற்று நோக்கி கவனித்தனர்.
நீச்சல் குளத்தில் காதல்ஜோடி:
மறுபக்கம் அஸ்வினும் அவரது காதல் மனைவியும் நீச்சல் குளத்தில் அமர்ந்து இருக்கின்றனர். செல்ல சண்டை, கொஞ்சல், ஊடல் என கலவையாக இருவரும் அமர்ந்து ரொமான்ஸ் செய்து விளையாடி வந்தனர். இப்படி இவர்கள் பேசிக் கொண்டே இருக்க பின் பக்கம் பேக்ரவுண்ட் மியூசிக் மென்மையாக ஒலித்தது.
குழப்பத்தில் அர்ஜுன்
காரில் சென்று கொண்டிருந்த அர்ஜுன் மிகவும் பலமான யோசனையுடன், மிகவும் டென்ஷனாக இருந்தார். இதனைக்கண்ட அவரது உதவியாளர் எதற்காக நீங்கள் டென்ஷன் ஆக இருக்கிறீர்கள்? என்ன ஆயிடுச்சு? இப்படி நீங்கள் இருக்க மாட்டீர்களே? என கேள்வி எழுப்பினார்.

உண்மையில் வந்தது யார்?
வீட்டில் நடப்பதை நினைத்து வருந்தும் அர்ஜுன், 20 வருஷங்களாக முன்பு விபத்தில் இறந்ததாக கூறிய ஒருவர் எப்படி திரும்பி வர முடியும். அதனால் இவர் உண்மையில் செண்பகம் தானா அல்லது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேறு யாரேனும் அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.
மருத்துவமனையில் சோதனை
சரஸ்வதி செவிலியருக்கும், செண்பகத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரிந்து கொள்வதற்காக அர்ஜுன் அவர் பணியாற்றிய மருத்துவமனைக்கு தனது உதவியாளருடன் சென்றிருக்கிறார். இதனை அனுவின் தோழி மறைந்திருந்து கண்காணிக்கிறார்.
மருத்துவரிடம் ஆலோசனை
சங்கரன் மருத்துவரிடம் சரஸ்வதி செவிலியர், வீட்டில் இருப்பதாக அர்ஜுன் கூறுகிறார். இதனைக் கேட்டு ஷாக் ஆன மருத்துவர் உண்மைதானா என கேட்டார். பிறகு அர்ஜுன் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் காணவில்லை என்பதை தேடுவது இல்லையா என கேள்வி எழுப்ப உடனே அதற்கு அவர் அவர் பலமுறை தனது உறவுகளை பார்ப்பதற்காக அடிக்கடி சென்று விட்டு மாதக்கணக்கில் திரும்புவது இல்லை என தெரிவித்தார்
சரஸ்வதியை ஒரு கும்பல் பின்தொடர்ந்து கொண்டே இருப்பதாக மருத்துவர், அர்ஜுனிடம் தெரிவித்தார். ரோஜா தனது அம்மா திரும்பி வர வேண்டுமென்று பூஜை நடத்திய நாளன்று சரஸ்வதி எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர்தான் ரோஜாவின் அம்மாவா என்று எங்களுக்கு தெரியவேண்டும். செண்பகத்தை வைத்து யாரேனும் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்த நினைத்திருக்கலாம் அல்லவா? என அர்ஜுன் சந்தேகிக்கிறார்.
மருத்துவமனைக்குள் நுழைந்து கும்பல்
அனுயின் தோழி உட்பட அந்த கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்தனர். பிறகு அந்த கும்பல் அர்ஜுன் மருத்துவரிடம் பேசுவது குறித்து ஓட்டு கேட்டனர். பிறகு அர்ஜுனை பின் தொடர்ந்தனர். இதனை சுதாரித்த அர்ஜுன் அந்த கும்பலை பிடிக்க முயன்றார். அத்துடன் இன்றைக்கான எபிசோட் நிறைவடைகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















