மேலும் அறிய

Amitabh bachchan: 'உதவியை வெளியே சொல்வதைவிட செய்வதையே விரும்புவேன்'- விமர்சனங்களுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணத்திற்கு உதவி செய்யவில்லை என்ற விமர்சனத்திற்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுகளும் முழு முனைப்பில் வேலை செய்து வருகின்றனர். அத்துடன் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு  தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். உதாரணமாக இலவசமாக உணவு கொடுத்தும், போதிய உதவிகளையும் செய்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா முதல் அலையில் பாலிவுட் நடிகர் சோனு சூத் செய்த உதவிகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. 

தற்போது இரண்டாவது அலையிலும் கன்னட நடிகர் டிரைவராக இருந்து மக்களுக்கு உதவிய செய்தியும் மக்களை அதிகளவில் ஈர்த்தது. இந்தச் சூழலில் அமிதாப் பச்சன் போன்ற பெரிய நடிகர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் அதற்கான நிவாரணங்கள் கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலர் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு தற்போது அமிதாப் பச்சன் தனது பதிலை அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வலைப்பதிவை எழுதியுள்ளார்.


Amitabh bachchan: 'உதவியை வெளியே சொல்வதைவிட செய்வதையே விரும்புவேன்'- விமர்சனங்களுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன் 

அதில், "எப்போதும் செய்த உதவியை வெளியே சொல்வதைவிட உதவி செய்வதையே நான் பெரிதாக நம்புபவன். வெளியே சொல்லாததால் நான் உதவிகள் செய்யவில்லை என்ற அர்த்தம் இல்லை. நானும் என்னுடைய மகன் அபிஷேக் பச்சனும் கொரோனா காலங்களில் பல உதவிகளை செய்துள்ளோம். இந்த உதவிகள் தொடர்பாக நாங்கள் யாரிடமும் வெளியே கூறியதில்லை. அத்துடன் இந்த உதவிகளால் பயன் அடைந்தவர்களுக்கு கூட நாங்கள் தான் உதவி செய்தோம் என்று தெரியாது.

விவசாயிகளுக்கு சிலர் பயிர் கடன் கட்டுவது முதல் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் வரை நாங்கள் பல உதவிகளை செய்துள்ளோம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் உணவு இன்றி தவித்த 5000 பேருக்கு தினமும் இருமுறை உணவு அளிக்க உதவி செய்துள்ளோம். மேலும் கொரோனா தடுப்பு பணியில் இருந்த முன்கள பணியாளர்கள் பலருக்கு பிபிஇ கிட், முகக்கவசம் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளோம். மும்பையிலிருந்து கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் செல்ல 2800 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு ரயில் முழுவதும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளோம்.


Amitabh bachchan: 'உதவியை வெளியே சொல்வதைவிட செய்வதையே விரும்புவேன்'- விமர்சனங்களுக்கு பதிலளித்த அமிதாப் பச்சன்

இவை தவிர புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய சீக்கிய அமைப்புகளுக்கும் நாங்கள் நிதியுதவி செய்துள்ளோம். தற்போது மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு 20 வென்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். அதேபோல் ஹைதராபாத் பகுதியில் கொரோனா பாதிப்பால் தாய் மற்றும் தந்தையை இழந்த இரண்டு குழந்தைகளுக்கான படிப்பு செலவு முழுவதையும் நாங்கள் ஏற்றுள்ளோம். அவர்கள் 10 வகுப்பு வரை சிறப்பாக படிக்கும் பட்சத்தில் அவர்களுடைய மேற்படிப்பு செலவையும் நாங்கள் ஏற்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

அமிதாப் பச்சனின் இந்த வலைப்பதிவு அவரை பற்றி குறை கூறி வந்த பலரின் வாயையும் அடைத்துள்ளது. இனிமேலாவது சமூக வலைத்தளங்களில் மட்டும் கருத்து பதிவு செய்யாமல், செயலில் செய்து காட்ட வேண்டும் என்று அமிதாப் உணர்த்தியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
Actor Suriya: மாஸ் காட்டிய கருப்பு.. சம்பளத்தை உயர்த்திய சூர்யா.. இத்தனை கோடியா?
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
CM Joseph Vijay: உங்க பேச்சு அருவருப்பா இருக்கு.. முதல்வர் விஜயை விளாசிய வினோதினி!
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்
தலைவர் 173 பட இயக்குநர் மாற்றம்.. சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கப்போகும் இயக்குநர் இவர்தான்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget