அந்த கெட்ட பழக்கம்... பிரேம்யோடு கேரவனில் இருந்தபோது நடந்த சம்பவம்! சோனா பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
தம் அடிக்கும் பழக்கம் எப்படி வந்தது, அடிமையானது எப்படி மற்றும் அதிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்று நடிகை சோனா கூறியுள்ளார்.

'பூவெல்லாம் உன் வாசம்' படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகை சோனா ஷாஜகான், சிவப்பதிகாரம், மிருகம், குசேலன், கோ, ரொம்ப நல்லவன் டா நீ, ஜித்தன் 2, ஸ்ரீ சபரி அய்யப்பன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தனக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி கூறியிருக்கிறார். மேலும், எப்படி அதிலிருந்து மீண்டு வந்தேன் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
தனது பயோபிக் படத்தை 'ஸ்மோக்' என்ற டைட்டிலில் வெப் சீரிஸாக இயக்கியுள்ளார். 8 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸில் நடிகை சோனா தான் 5 வயது முதல் தற்போது வரையில் வாழ்க்கையில் சந்தித்த எல்லா பிரச்சனைகளையும் படமாக்கியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் பிரேம்ஜியை வைத்து ஒரு படம் இயக்கிக் கொண்டிருந்தேன்.
அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஒரு இருக்கையில் அமர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருந்தேன். கேரனுக்கு உள்ளே ஒரு ரூமில் பிரேம்ஜி இருந்தார். அப்போது எனக்கு ஒரு சத்தம் கேட்டது. அது சில்மிஷம் செய்வது போன்று கேட்டது. அதனால், நான் பிரேம்ஜி கதவை தட்டினேன். அதே போன்று அவரும் கதவை திறந்து எனக்கும் அந்த சத்தம் கேட்டது என்றார். மேலும், இருவர் பேசுவது போன்று சத்தம் கேட்கவே, நானும் பிரேம்ஜியும் கேரவன் கர்ட்டனை திறந்து பார்த்தோம்.
அப்போது தான் எங்களுக்கு புரிந்தது. மேனேஜர் துணை நடிகையிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் நான் பேசி தான் உங்களுக்கு டபுள் மடங்கு சம்பளம் வாங்கி கொடுத்தேன். எதற்கு என்றால் நீ என்னுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்பதற்கு தான் என்று பேசிக் கொண்டிருந்தார். எனக்கு வந்த கோபத்தில் அந்த மேனேஜரை கன்னத்தில் அறைந்துவிட்டேன். அப்போது தான் பிரேம்ஜி சிக்ரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அதை வாங்கி நான் அடித்தேன். பின்னர் எப்போதெல்லாம் நான் பதற்றமாக, டென்ஷனாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் தம் அடிப்பது வழக்கமாகிவிட்டது. 1, 2, 3, 4 என்று சிகரெட்டுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போனது. ஒரு கட்டத்தில் எத்தனை சிக்ரெட் பிடிக்கிறேன் என்று எனக்கே தெரியாமல் போய்விட்டது.
அப்போது தான் எனக்கு புரிந்தது. இது நல்லதல்ல என்று . பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தம் அடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது முழுவதுமாக நிறுத்திவிட்டேன். சிகரெட் பிடிப்பது, சரக்கு அடிப்பது எல்லாம் தவறாக தெரிந்த காலம் மாறி இப்போது பேஷன், ஸ்டைலுக்காக தம், சரக்கு என்று அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். டாஸ்மாக்கிற்கு கூட பெண்கள் சகஜமாக சென்று சரக்கு வாங்கி அடிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் ஒரு முறை அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம் என்று சோனா கூறியுள்ளார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

