மேலும் அறிய

''இங்கு மரியாதையில்லை.. வளரவிடமாட்டாங்க..'' சினிமாத்துறையை கிழித்து தொங்கவிட்ட சரண்யா!

சினிமாவில் பெண்களை வளரவிட மாட்டார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பெண்களை வளரவிட மாட்டார்கள் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நயன்தாராவுக்கு ஹேட்ஸ் ஆஃப்

சினிமாவில் பெண்களுக்கு மரியாதையில்லை. பெண்களை முன்னிலைப் படுத்தும் படங்கள் குறைவு. பெண்களை வளரவே விடமாட்டார்கள். எப்படி கீழே இழுப்பது என்றே பார்ப்பார்கள். பெரிய நாயகர்களின் படத்தில் ஹீரோவுக்கு பின்னால் மட்டுமே கதை இருப்பதாகக் காட்டுவார்கள். நிஜ வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் இருந்தால் அந்தப் பெண்ணின் பின்னால் மட்டும் எந்தக் கதையும் இருக்காதா என்ன? ஆனால் அதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படிப்பட்ட சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளார் நயன்தாரா. அவர் செய்துள்ளது மிகப்பெரிய சாதனை. அவருக்கு தலை வணங்குகிறேன். நயனுடன் நடித்தபோது எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. அதுபோல் அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் எந்த பந்தாவும் இல்லாமல் இருப்பார். அவர் ரொம்ப அழகானவர் மட்டுமல்ல, உண்மையானவர். நல்லவர். அவர் மனிதர்களை சரியாக கணிக்கிறார். அவர் யாருடனாவது பேசவில்லை என்றால் அந்த நபர் உண்மையிலேயே மோசமான நபர் என்பதை தெரிந்து கொள்ளலாம். எதிராளியை சமாளிக்க ஒதுங்கிக் கொள்வது சரி என நினைத்து தள்ளிவைப்பார். நயனை நான் என் மகள் என்று சொல்லி தான் பேசுவேன்.

யோகிபாபு ஒரு பொம்மை!

அதுபோல் நடிகர் யோகிபாபு பார்த்தும் சொல்ல வேண்டும். அவர் ஒரு பொம்மை மாதிரி. அவரை எல்லாருக்குமே அவ்வளவு பிடிக்கும். அவர் ஸ்க்ரீனில் வந்து நின்று டயலாக் பேசினாலே போதும். அவர் ஒரு திறமைசாலி. கோலிவுட்டின் அம்மா என்ற பட்டம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப கெத்தா இருக்கு. எனக்கு வன்முறை பிடிக்காது. சத்தம் பிடிக்காது. சண்டை பிடிக்காது. டிவியில் வடிவேலு, இளையராஜா சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே பார்ப்பேன். அப்புறம் பேப்பர் படிக்க மாட்டேன். அறியாமையும் மகிழ்ச்சியே என்பதற்கு நான் தான் நல்ல சாட்சி. அதனால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் என்னைப் போல் யாரும் இருக்காதீங்க. படிக்க வேண்டும். 


'இங்கு மரியாதையில்லை.. வளரவிடமாட்டாங்க..'' சினிமாத்துறையை கிழித்து தொங்கவிட்ட சரண்யா!

சரண்யாவும் தமிழ் சினிமாவும்..


சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார். ராம் (2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது. சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget